224 தொகுதிகளில் 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெல்ல வேண்டுமென ராகுல்காந்தி தேர்தல் பிரச்சாரத்தில் பேசியுள்ளார்.
மே-10இல் தேர்தல்:
கர்நாடக தேர்தல் வரும் மே மாதம் 10ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கான தேர்தல் பிரச்சாரத்தில் பிரதான கட்சி தலைவர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் அமித்ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி என பலரும் தங்கள் பிரச்சாரத்தை மேற்கொன்டு வருகின்றனர்.
பிரச்சாரம்:
ராகுல்காந்தி காங்கிரஸ் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சாரம் மேற்கொள்கையில் நிர்வாகிகளுக்கு பல்வேறு கருத்துக்களை முன் வைத்தார். அதில், கர்நாடகா சட்டசபை தொகுதிகளில் இருக்கும் மொத்தம் 224 தொகுதிகளில் 150 தொகுதிகளை காங்கிரஸ் கைப்பற்ற வேண்டும் என கோரிக்கை வைத்தார்.
வெற்றி பெறவேண்டும்:
அதே போல, தற்போது கர்நாடகாவில், காங்கிரஸ் கட்சிக்கு ஆதரவான சூழல் நிலவுகிறது. இதனை கருத்தில் கொண்டு தீவிரமாக செயல்பட்டு வாக்கு வித்தியாசத்தை பெரிதாக உருவாக்கி வெற்றி பெற வேண்டும் எனவும், பணத்தை கொண்டு நமது வெற்றியை திருடி திருட்டு தனமாக பாஜக ஆட்சியமைக்க வாய்ப்புள்ளது எனவும், ராகுல்காந்தி குற்றசாட்டை முன்வைத்தார்.