[File Image]
மும்பை: 31 வருடங்களாக தலைமறைவாக இருந்த மும்பை கலவர வழக்கில் தொடர்புடைய நபர் மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
1992ஆம் ஆண்டு நாட்டையே உலுக்கிய பாபர் மசூதி இடிப்பு கலவரத்தின் தொடர்ச்சியாக நாட்டில் பல்வேறு இடங்களில் கலவரங்கள் ஏற்பட்டன. 1993ஆம் ஆண்டு மும்பையிலும் கலவரம் நிகழ்ந்தது. அப்போது கலவரத்தில் கொலை முயற்சி மற்றும் சட்டவிரோதமாக ஒன்று கூடுதல் உள்ளிட்ட வழக்கில் கைதாகி இருந்தவர் சையது நாதிர் ஷா அப்பாஸ் கான்.
இவர் கலவரத்தின் போது கைது செய்யப்பட்டு பின்னாளில் ஜாமீனில் வெளியே வந்துள்ளார். அதன் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜராக பல முறை சம்மன் அனுப்பியும் சையது நாதிர் ஷா நேரில் ஆஜராகவில்லை. இதனை அடுத்து, அவரது வீடு, உறவினர்கள் வீடு என்று போலீசார் தேடி வந்துள்ளனர்.
சுமார் 31 ஆண்டுகளாக பல்வேறு முறைகளில் தேடி இறுதியாக செல்போன் அழைப்புகளை பின்தொடர்ந்து, அதன் மூலம் சையத் நாதிர் ஷா அப்பாஸ் கான் இருக்கும் இருப்பிடம் அறிந்து மும்பை, ரஃபி அகமது கிட்வாய் மார்க் காவல் நிலைய அதிகாரிகள் சையதை கைது செய்துள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. தற்போது கைதான சையத் நாதிர் ஷா அப்பாஸ் கானிடம் போலீசார் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளனர்.
மணத்தக்காளி கீரை -கசப்பே இல்லாமல் மணத்தக்காளி கீரை செய்வது எப்படி என இப்பதிவில் பார்க்கலாம். தேவையான பொருட்கள்; மணத்தக்காளி கீரை= இரண்டு கைப்பிடி அளவு உளுந்து= ஒரு…
ZIMvIND : தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…
சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…
சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…
புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…
நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…