மும்பையில் மாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து..!

மும்பையில் 7 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தில் மும்பையில் அமைந்துள்ள போரிவாலியில் உள்ள 7 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்த தகவல் அளிக்கப்பட்ட பின்னர் தீயணைப்பு வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்துள்ளனர். இந்த தீயணைப்பில் ஈடுபட்ட தீயணைப்பு வீரர் ஒருவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.

அவர் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  மேலும், இந்த தீ விபத்தில் பொது மக்களுக்கு காயம் ஏதும் ஏற்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தீ விபத்து குறித்த விசாரணையில் போரிவாலி காவல்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.