உலக கோப்பை தொடரில் கண்டிப்பாக தோனி இந்திய அணிக்கு ஒரு மிகப்பெரிய பக்கபலமாக இருப்பார் என்று யுவராஜ் சிங் கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது அற்புதமான கிரிக்கெட் அனுபவம் மற்றும் விளையாட்டின் போக்கை கணிக்கும் ஆற்றல் மேலும் அதை மாற்றும் ஆற்றல் அவருக்கு உள்ளது. ஒரு விக்கெட் கீப்பராக மைதானத்தில் நடக்கும் அனைத்தையும் அவரால் பார்க்க முடியும். மேலும் கிரிக்கெட்டில் இதனை கடந்த பல ஆண்டுகளாக அவர் மிகச் சரியாக செய்து வருகிறார்.
மேலும் தோனி மிகச் சிறந்த கேப்டனாகவும் இருந்துள்ளார். தற்போது விராட் கோலி உள்ளிட்ட இளம் வீரர்களை எல்லாம் வழி நடத்துகிறார்.
மேலும் இந்திய அணியின் முடிவு எடுப்பதில் எடுக்க அவர் கண்டிப்பாக இருக்கவேண்டும். தோனி ஆஸ்திரேலியாவில் மிகவும் நன்றாக ஆடினார்.
தற்போது அவர் பழையபடி தோனி திரும்பியுள்ளதையும் அவர் அடிப்பதையும் பார்க்கும்போது மிகவும் சிறப்பாக உள்ளது என்று யுவராஜ் சிங் பெருமிதம் பொங்க என்று கூறியுள்ளார்.