நான் தான் நடிப்பேன்! கதறி அழுது பட வாய்ப்பு கேட்ட நடிகை மீரா ஜாஸ்மின்!

தமிழ் சினிமாவில் ரன் என்ற திரைப்படத்தில் நடித்ததன் மூலம் அறிமுகமானவர் நடிகை மீரா ஜாஸ்மின். இவர் இந்த திரைப்படத்தை தொடர்ந்து பாலா, புதிய கீதை,ஆஞ்சநேய, ஜோடி, ஆயுத எழுத்து, கஸ்தூரி மான்,சண்டக்கோழி உள்ளிட்ட பல படங்களில் தொடர்ச்சியாக நடித்தார். இவர் நடிக்கும் படங்கள் எல்லாம் இவருக்கு தொடர்ச்சியாக ஹிட்டும் ஆனது.

இருந்தாலும் இவருக்கு சமீப காலமாக பெரிய வாய்ப்புகள் வரவில்லை என்றே சொல்லலாம். இதனால் என்னவோ அவர் அடிக்கடி தனது சமூக வலைதள பக்கங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டும் வருகிறார். இதற்கிடையில் ஒரு திரைப்படத்தில் நடிப்பதற்காக மீரா ஜாஸ்மீன் மிகவும் கதறி அழுது வாய்ப்பு கேட்ட சம்பவம் குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

அது என்ன திரைப்படம் என்றால் இயக்குனர் லிங்கு சாமி இயக்கத்தில் விஷால் நடிப்பில் வெளியான சண்டக்கோழி திரைப்படம் தான். இந்த திரைப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக நடிகை மீராஜாஸ்மின் தான் நடித்து இருந்தார். அவருடைய சினிமா கேரியரில் மிகவும் முக்கியமான திரைப்படம் என்று கேட்டால் சண்டக்கோழி தான் என்றே கூறலாம்.

ஆனால், இந்த திரைப்படத்தில் முதலில் விஷாலுக்கு ஜோடியாக நடிக்க விருந்து  நடிகை மீரா ஜாஸ்மின் இல்லயாம் வேறொரு நடிகையை தான் நடிக்க வைக்க இயக்குனர் லிங்கு சாமி திட்டமிட்டு இருந்தாராம். ஆனால், ஒரு முறை லிங்கு சாமி மீரா ஜாஸ்மினை சந்திக்கும் போது அடுத்து என்ன படம் செய்து கொண்டு இருக்கிறாய் என கேட்டாராம். அதற்க்கு லிங்கு சாமி சண்டக்கோழி என்று கூறினாராம்.

படத்தின் கதையை சொல்லு கேட்போம் என்று மீரா ஜாஸ்மின் கேட்டாராம். அதற்கு லிங்கு சாமி படத்தின் கதை முழுவதும் சொன்னாராம். பிறகு கதை கேட்டவுடன் நான் எதற்கு இந்த திரைப்படத்தில் நடிக்க கூடாது என்று கேட்டாராம். அதற்கு லிங்கு சாமி என்னுடைய எண்ணத்தில் வேறொரு நடிகை இருக்கிறார் அவர் சரியாக இருப்பார் என கூறினாராம். பிறகு மீரா ஜாஸ்மின் கதறி அழுதுகொண்டே இந்த படத்தில் நான் தான் நடிக்கணும் என்று கேட்டாராம்.

பிறகு அவர் அழுத காரணத்தால் லிங்கு சாமி சண்டக்கோழி படத்தில் நடிக்கும் வாய்ப்பை மீரா ஜாஸ்மினுக்கு கொடுத்தாராம். இந்த தகவலை லிங்கு சாமியே சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்து இருக்கிறார். மேலும் நடிகை மீரா ஜாஸ்மின்