சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை…!

சுதந்திர தினவிழாவை முன்னிட்டு சென்னையில் அணிவகுப்பு ஒத்திகை. 

வரும் ஆகஸ்ட் 15-ம் தேதி நாடு முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா கொண்டாடப்படவுள்ளது. இந்நிலையில், தமிழகத்தை பொறுத்தவரையில், கடந்த ஆண்டு கொரோனா பரவல் காரணமாக மிகவும் எளிய முறையில் சுதந்திர தினவிழா கொண்டாடப்பட்டது.

அந்த வகையில், இந்த ஆண்டு தமிழகத்தின் நோய் தொற்றின் தீவிரம் குறைந்துள்ள நிலையில், சுதந்திர தினவிழாவுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதனையடுத்து, சென்னையில் சுதந்திர தினவிழாவுக்காக, ராஜாஜி சாலையில், சுதந்திர தினவிழா ஒத்திகை நடைபெறுகிறது.

கடந்த 7-ம் தேதி முதல் கட்ட ஒத்திகை நடைபெற்ற நிலையில், இன்று இரண்டாம் கட்ட ஒத்திகை நடைபெறுகிறது. வரும் 13-ம் தேதி 3-ம் கட்ட ஒத்திகை நடைபெறவுள்ளது. இந்த ஒத்திகை நிகழ்வுக்காக காமராஜர் சாலை மற்றும் ராஜாஜி சாலையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காரணமாக, கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை கைக்கொண்டு இந்த சுதந்திர தினவிழா நடைபெறவுள்ளது.