சாரை பாம்பை சமைத்து சாப்பிட்ட நபர் கைது!

சாரை பாம்பை சமைத்து சாப்பிட்ட நபர் கைது.

கேரளாவில் எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள கோத்தமங்கலம் வனசாரகத்திற்கு உட்பட்ட பகுதியில், மர்மநபர் ஒருவர் பாம்புகளை சமைத்து சாப்பிடுவதாக, வனத்துறையினருக்கு தகவல் வந்துள்ளது. நேற்று இதுகுறித்து விசாரணை மேற்கொண்டதில், வனத்துறையினர் பிஜு என்ற நபரை கைது செய்துள்ளனர்.

இதுகுறித்து வனத்துறையினர் கூறுகையில், பிஜு சாரைப்பாம்புகளை பிடித்து அதை சமைத்து சாப்பிட்டுள்ளார். அவரது வீட்டில் இருந்த இறைச்சியை பறிமுதல் செய்துள்ளோம். மேலும் , அவர் சாரைப்பாம்பு இறைச்சியை மலைப்பாம்பு இறைச்சி என விற்பனை செய்ய முயன்றுள்ளார்.

இவர் மீது வழக்கு பதிவு செய்து அவரை கைது செய்த வனத்துறை அதிகாரி, இறைச்சிக்காக பாம்புகளை கொல்வது, என் வாழ்க்கையில் இதுவரை சந்தித்திராத வழக்கு என தெரிவித்துள்ளார்.