மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியை பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார்.
முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் மேற்கு வங்கத்தில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்கு, அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டதில் ஊழல் நடந்ததாக புகார் எழுந்தது.
ஊழல் வழக்கு
மேற்கு வங்க மாநிலத்தில் நிரந்தர ஆசிரியர் பணி நியமனத்தில் நடந்த ஊழல் தொடர்பான வழக்கில், திரிணமுல் கட்சியின் எம்.எல்.ஏ. மாணிக் பாட்டாச்சர்யா ஏற்கனவே, கைது செய்யப்பட்டார். அவரை தொடர்ந்து நேற்று ஆளும் திரிணமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஜிபான் கிருஷ்ண சகா சி.பி.ஐ. அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். தற்போது அவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
சுவேந்து அதிகாரி விமர்சனம்
இந்த நிலையில், முதல்வர் மம்தா பானர்ஜியை பாஜக தலைவர் சுவேந்து அதிகாரி கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக டிவிட்டரில் அவர் கூறியதாவது ” உங்கள் எம்எல்ஏக்கள் ஊழல் வழக்கில் சிக்கி கைது செய்யப்பட்டனர். நீங்கள் குற்றவாளிகளைப் பாதுகாக்கிறீர்கள் மற்றும் சட்டவிரோதமாக நிரந்தர ஆசிரியர் பணி நியமனம் செய்யப்பட்டவர்களுக்கு உங்கள் ஆதரவை மீண்டும் குரல் கொடுக்கிறீர்கள். இது மிகவும் அவமானம் நீங்கள் ஊழல் கூட்டின் ராணி தேனீ” என கடுமையாக விமர்சித்து பதிவிட்டுள்ளார்.
Your MLAs got arrested as they were submerged in Corruption.
Glad that your facade of “Zero Tolerance” is coming off. You’re defending the culprits & once again voicing your support for them who were recruited illegally.Shame on you. You’re the Queen Bee of the Corruption Hive.
— Suvendu Adhikari • শুভেন্দু অধিকারী (@SuvenduWB) April 19, 2023