மதுரையில் ஒரே மாதத்தில் 3வது முறையாக ஜவுளிக்கடை ஒன்றில் தீ விபத்து ஏற்பட,5 மணி போராட்டத்திற்கு பிறகு தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர்.
மதுரை தெற்கு மாசி வீதியில் சைபர் அகமது என்பவருக்கு சொந்தமான ஜவுளி கடை ஒன்று உள்ளது .அங்கு இன்று அதிகாலை 4 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.உடனடியாக பெரியார் பேருந்து நிலையம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்க, அவர்கள் வரும் முன்னரே ஜவுளிக்கடை மற்றும் குடோனில் தீ மளமளவென பரவி பல லட்சம் மதிப்பிலான ஜவுளி மற்றும் ரெடிமேட் ஆடைகள் எரிந்து சாம்பலாக்கியது .
அதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் 10-க்கும் மேற்பட்ட வாகனங்களை பயன்படுத்தி தீயை அணைக்க போராடி வந்தனர் .சுமார் 5 மணி நேர போராட்டத்திற்கு பின் தீயை தீயணைப்பு வீரர்கள் போராடி கட்டுக்குள் கொண்டு வந்தனர்.தற்போது இந்த தீ விபத்து குறித்த விசாரணையை மதுரை விளக்குத் தூண் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
ஒரே மாதத்தில் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் பகுதியில் 3 வது முறையாக முறை தீ விபத்து ஏற்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கடந்த மாதம் தெற்கு மாசி வீதியில் ஏற்பட்ட தீ விபத்தில் தீயை கட்டுபடுத்த முயன்ற போது 2 தீயணைப்பு வீரர்கள் உயிரழந்ததும் ,அதனை தொடர்ந்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்காமல் கட்டப்பட்ட 100-க்கும் மேற்பட்ட மாவட்ட நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…