மதுரை ஆர்.எஸ்.எஸ்.நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு.! மேலும் ஒருவர் கைது.! 

மதுரை ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்ற சம்பவத்தில் ஏற்கனவே இரண்டு பேர் கைது செய்யப்பட்ட நிலையில், மூன்றாவதாக மாபாளையத்தை சேர்ந்த அபுதாகீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

என்.ஐ.ஏ சோதனைக்கு பிறகு, கோவையில் பல்வேறு இடங்களில் பெட்ரோல் குண்டு வீசப்பட்டு, கோவை மாநகர் முழுவதும் பதற்றமான சூழ்நிலை நிலவி வருகிறது. இதனால் அம்மாநகர் முழுவதும் அனைத்து தரப்பு காவல்துறையினரும் குவிந்துள்ளனர். இந்த பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக பலர் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே போல, அனுப்பானடி பகுதி ஆர்.எஸ்.எஸ் நிர்வாகி கிருஷ்ணன் வீட்டில் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசி சென்றுள்ளனர். இது தொடர்பாக, வழக்குபதிவு, செய்து, போலீசார் இருவரை ஏற்கனவே கைது செய்தனர்.

மதுரை சம்பட்டிபுரத்தை சேர்ந்த உசேன் மற்றும் நெல்பேட்டையை சேர்ந்த சம்சுதீன் ஆகியோர் ஏற்கனவே கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது மூன்றாவதாக, மதுரை, மாபாளையத்தை சேர்ந்த அபுதாகீர் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.  இவர் அப்பகுதியில் அக்குபஞ்சர் கிளினிக் நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Leave a Comment