மதுரையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி !

மதுரையில் மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதியான நிலையில் மொத்த எண்ணிக்கை 113ஆக உயர்ந்துள்ளது. 

தமிழகத்தில், இன்று மட்டும் 600 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மொத்த எண்ணிக்கை 6009ஆக உயர்ந்துள்ளது. இன்று 3பேர் கொரோனாவில் உயிரிழந்துள்ளனர். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 40 ஆக உயர்ந்துள்ளது. இதுவரை தமிழகத்தில் 1605 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

இந்நிலையில், தலைநகர் சென்னையில் மட்டும் இன்று ஒரே நாளில் 399 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் சென்னையில் மொத்தம் 3043 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து மதுரையில் இன்று மேலும் 2 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மதுரையில் மொத்தம் 113 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மதுரையில் தற்போதுவரை 50திற்கும் மேற்பட்டோர் குணமடைந்துள்ளனர்.