மதுபான கொள்கை வழக்கு – ஜாமீன் கோரி சிசோடியா மனு தாக்கல்!

புதிய மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் சிசோடியா மனு தாக்கல் செய்தார்.

புதிய மதுபான கொள்கை வழக்கில் ஜாமீன் கோரி ஆம் ஆத்மி தலைவரும், டெல்லி முன்னாள் துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். சிசோடியாவின் 5 நாள் சிபிஐ காவல் முடிவடையும் சனிக்கிழமை (மார்ச் 4) அன்று ஜாமீன் விசாரணை நடைபெறலாம்.

இந்த விவகாரத்தில் தலையிடவோ முடியாது என்று கூறி சிசோடியாவின் ஜாமீன் மனுவை உச்சநீதிமன்றம் ஏற்க மறுத்ததை அடுத்து, தற்போது மணீஷ் சிசோடியா ஜாமீன் கோரி டெல்லி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

டெல்லி அரசின் புதிய மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக கடந்த சில தினங்களுக்கு முன்பு டெல்லி துணை முதலமைச்சர் மணீஷ் சிசோடியா சிபிஐயால் கைது செய்யப்பட்டார். கைதை தொடர்ந்து, டெல்லி துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார் மணீஷ் சிசோடியா. இவரது ராஜினாமா மனுவை டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் ஏற்றுக்கொண்டார்.

Leave a Comment