லைக்ஸ்,ஷேரிங் மில்லியனை தாண்டவேண்டும் – புஸ்ஸி ஆனந்த்

விஜய் மக்கள் இயக்கத்தின் தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டம் பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் பொது செயலாளர் புஸ்ஸி ஆனந்த் தலைமையில் நடைபெற்றது. ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் சமூக வலைதளங்களில் அடையாளம் காணப்பட்ட 1,000 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில், இயக்கத்தின் தலைமை ஒரு பதிவை facebook, instagram, X (twitter) போன்ற சமுக வலைதளங்களில் வெளியிட்டால், அணியில் இருப்பவர்கள் அனைவரும் லைக் மற்றும் ஷேர் செய்ய வேண்டும். லைக்ஸ் & ஷேரிங் எண்ணிக்கை மில்லியனை சாதாரணமாக தாண்ட வேண்டும்.

இயக்கத்தின் அதிகாரப்பூர்வ தகவல்களை வெளியிடுவதற்காக Exclusive ஆக இருக்கும் Thalapathy Vijay Makkal iyakkam என்ற பெயரிலான xதளம், Twitter ஃபேஸ்புக், இண்ஸ்டாகிராம், யூட்யூப் சேனல் போன்ற சமூக ஊடகங்களின் Followers, Subscribers எண்ணிக்கை மில்லியன்ஸ் கணக்கில் உயர அணி முழுமையாக முயற்சிக்க வேண்டும்.

அதில் வெளியாகும் வீடியோக்களை மற்ற சமூக ஊடகங்களில் பகிர வேண்டும்.   அணியின் தலைமை எந்த மாதிரியான படங்கள், வீடியோக்களை பயன்படுத்தச் சொல்கிறதோ, அதனை அப்படியே பின்பற்ற வேண்டும். தலைமை ஒப்புதல் இன்றி மற்றவர்களின் பதிவுகளை லைக் ஷேர் செய்ய கூடாது. மொழி, இனம் , சாதி, மதம் வட்டத்தில் சிக்காமல் நம்பிக்கை சார்ந்த விஷயங்களில் தலையிடாமல் பதிவிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.