பாஜகவில் இருந்து விலகிய கிருஷ்ண பிரபு அதிமுகவில் இணைந்தார்..!

பாஜகவில் இருந்து விலகிய கிருஷ்ண பிரபு அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன்  முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். 

சமீப காலமாக பாஜகவில் இருந்து முக்கிய புள்ளிகள் தங்கள் பதவியை ராஜினாமா செய்து வரும் நிலையில், கடந்த 13-ஆம் பாஜக மாநில தலைவராக அண்ணாமலை சரியாக செயல்படவில்லை என குற்றம்சாட்டி, அக்கட்சியின் மாநில பொருளாதார பிரிவு செயலாளர் கிருஷ்ண பிரபு  ராஜினாமா  செய்திருந்தார்.

அவர் எழுதியிருந்த ராஜினாமா கடிதத்தில், பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் திரு அண்ணாமலை ஆகிய நீங்கள்தான். நீங்கள் சரி பட செயல்படவில்லை என்றும், இதற்கும் மேல் பாரதிய ஜனதா கட்சியில் என்னை அர்ப்பணித்தேன் என்றால் எனது உயிருக்கே பல பாதிப்பு வரும் என்று நினைத்து இந்த கட்சியில் இருந்து நான் நிரந்தரமாக ராஜினாமா செய்கிறேன் என்றும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், இன்று கிருஷ்ணபிரபு, அதிமுக தகவல் தொழில்நுட்ப பிரிவின் மதுரை மண்டல செயலாளர் ராஜ் சத்யன் அவர்கள் முன்னிலையில் தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

Leave a Comment