3 பேரின் தலை மேல் கல்லை தூக்கி போட்டு கொலை..!

கர்நாடக மாநிலத்தில் தூங்கிக் கொண்டிருந்த 3 பேரின் தலைமேல் கல்லை தூக்கி போட்டு கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலத்தில் சித்தூர் மாவட்டத்தில் வசித்து வந்தவர்கள் சீனப்பா, மரேஷ், யல்லேஷ் இவர்கள் 3 பேரும் பன்னி விற்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார்கள் இந்நிலையில் வழக்கம் போல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை பன்றி பண்ணை அருகே மூன்று பேரும் உறங்கிக்கொண்டிருந்தனர் .

மேலும் அப்பொழுது அங்கு திடீரென வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் தூங்கிக் கொண்டிருந்த சீனப்பா, மரேஷ், யல்லேஷ் ஆகிய மூன்று பேரின் தலையில் கல்லைப்போட்டு தப்பிச் சென்றுவிட்டனர், மேலும் இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.

இந்நிலையில் இந்த தகவலை அறிந்த காவல்துறையினர் விரைந்து சம்பவ இடத்திற்கு சென்று சீனப்பா, மரேஷ், யல்லேஷ் மூன்று பேரின் உடலை மீட்டு அங்குள்ள அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அந்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.