தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி விவகாரம் – தவெக தலைவர் விஜய் நேரில் சென்று ஆறுதல்.!

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி சென்றடைந்த த.வெ.க தலைவரும் நடிகருமான விஜய்மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் கிராமத்தில் விஷச்சாராயம் குடித்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட 100க்கும் மேற்பட்டோரில் 42 பேர் இதுவரை உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.

மேலும், அந்த விஷச்சாராயத்தால் மரணம் அடைந்த கருணாபுரம் கிராமத்தைச் சேர்ந்த 21 பேரின் உடல்கள் ஒரே இடத்தில் அடக்கம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.   இதற்கிடையில், இன்றைய தினம் கள்ளக்குறிச்சியில் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு ஆறுதலை தெரிவிக்க பலர் நேரில் வருகை தந்தனர்.

ஏற்கனவே, எடப்பாடி பழனிச்சாமி, பிரேமலதா விஜயகாந்த், உதயநிதி ஸ்டாலின், அண்ணாமலை, செல்வப்பெருந்தகை ஆகியோர் அஞ்சலி செலுத்திவிட்டு குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகரும் தமிழக வெற்றிக்கழக தலைவருமான விஜய் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவிப்பதற்காக சென்னையில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு வருகை புரிந்துள்ளார்.

தற்பொழுது, விஷச்சாராயம் குடித்து கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிக்சை பெற்று வருபவர்களிடம் நலம் விசாரித்ததோடு, விரைவில் நலமுடன் வீடு திரும்புவர் என்று அவர்களைது குடும்பத்திற்கும் ஆறுதலை தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து, உயிரிழந்தவர்கள் குடும்பத்தை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்கவுள்ளர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

முன்னதாக, இந்த விஷச்சாராயம் அருந்திய உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு விஜய் தனது எக்ஸ் தள வாயிலாக, “இரங்கல் தெரிவித்ததோடு, தமிழக அரசு அலட்சியத்தை சுட்டிக்காட்டி, இது போன்ற சம்பவங்கள் நிகழாத வண்ணம், இனிமேலாவது தமிழக அரசு கடுமையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு தடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்” என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

ரசிகர்களுக்கு ஷாக்..! இந்திய அணியை வீழ்த்தி 1-0 என முன்னிலை பெற்றது ஜிம்பாப்வே ..!

ZIMvIND :  தற்போது நிறைவு பெற்ற இந்திய-ஜிம்பாவே அணி இடையேயான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி இந்திய அணியை வீழ்த்தி தொடரில் 1-0 என முன்னிலையில்…

5 hours ago

என்னது சங்கீதாவா.? இந்த எழவுக்கு தான் இந்தி வேண்டாம்னு சொல்கிறோம்.! துரைமுருகன் பேச்சு

சென்னை: மத்திய அரசின் புதிய குற்றவியல் சட்டத்திற்கு எதிராக திமுக சார்பில் சென்னையில் நடைபெற்ற உண்ணாவிரத போராட்டத்தில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார். கடந்த ஆட்சியில் நிறைவேற்றம் செய்யப்பட்ட…

6 hours ago

சூரியகுமார் யாதவ் கேட்ச் சர்ச்சை ..! ஆஸ்திரேலியா ஊடகத்தை விளாசிய சுனில் கவாஸ்கர் ..!

சுனில் கவாஸ்கர் : இந்திய அணியின் முன்னாள் வீரரான சுனில் கவாஸ்கர் சூரியகுமார் யாதவின் கேட்ச் சரி தான் என்று சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறி…

6 hours ago

சித்தா படித்த பட்டதாரிகளே… அரசாங்கத்தில் வேலை செய்ய ரெடியா?

புதுக்கோட்டை : மாவட்டத்தில் தேசிய ஊரக நலவாழ்வு குழுமத்தின் (NRHM) கீழ் புதுக்கோட்டை மாவட்ட சித்த மருத்துவ அலுவலரின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள ஆயுஷ் பிரிவுகளில் காலியாக…

6 hours ago

உங்க வீட்டிற்கு சூரிய மின்சாரம் வேண்டுமா? SBI கடனுதவி.! முழு விவரம்…

நாம் வீடுகள் மற்றும் தொழிற்சாலைகளில் மேற்கூரை சோலார் பேனல்களை அமைக்க, எஸ்பிஐ வங்கி கடனுதவி வழங்குகிறது. அதற்கான தகுதிகள் மற்றும் எவ்வாறு பெற வேண்டும் என பார்க்கலாம்.…

6 hours ago

இனி IITயில் இசை பட்டப்படிப்புகளை படிக்கலாம்.! எங்கு, எப்படி தெரியுமா.?

மண்டி: ஹிமாச்சல் பிரதேசம் மாநிலத்தில் மண்டி IITயில் இசை மற்றும் இசை தெராபி படிப்புகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இத்திய தொழில்நுட்ப கழகங்கள் (IIT) பல்கலைக்கழகத்தில் பல்வேறு துறை…

7 hours ago