ராமதாஸை தேடி வந்து கூட்டணி வைத்தது ஜெயலலிதான் தான் – பாமக முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார்

நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற பட பாணியில் ஜெயக்குமாரின் பேச்சு உள்ளதாக பாமக முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் விமர்சனம். 

தமிழகத்தில் மிகப்பெரிய கட்சி நாங்கள் தான் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் முன்வைத்த விமர்சனத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் பதிலளித்தார்.

அவர் கூறுகையில், அதிமுகவுடன் கூட்டணி வைத்த பிறகுதான் பாமகவுக்கு அங்கீகாரம் கிடைத்தது. பாமகவுக்கு அடையாளம் கொடுத்ததே நாங்கதான். நீங்க இப்போ எம்.பி.யா இருக்குறது யாரால? என கேள்வி எழுப்பினார். தற்போது நன்றி மறந்து பேசுகிறார் அன்புமணி ராமதாஸ். இதனை தமிழ்நாடு மக்கள் மட்டுமின்றி, பாமக தொண்டர்கள் கூட மதிக்கமாட்டார்கள் என விமர்சித்தார்.

ஜெயக்குமாரின் விமர்சனம் குறித்து பாமக முன்னாள் எம்.எல்.ஏ கணேஷ்குமார் கூறுகையில், 1998ம் ஆண்டு தேர்தலில் ராமதாஸை தேடி வந்து கூட்டணி வைத்தது ஜெயலலிதான் தான். நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’ என்ற பட பாணியில் ஜெயக்குமாரின் பேச்சு உள்ளதாக விமர்சித்துள்ளார்.

Leave a Comment