ஐஎஸ்எல் கால்பந்து லீக் இன்று தொடங்கவுள்ள நிலையில், முதல் போட்டியில் ஏடிகே மோகன் பகான் – கேரளா பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன.
ஐஎஸ்எல் கால்பந்து தொடர்:
இந்தியாவில் ஐபிஎல் தொடருக்கு அடுத்தபடியாக பெரிதாக நடப்பது, ஐஎஸ்எல் கால்பந்து தொடர். 2020 – 2021 ஆம் ஆண்டு நடைபெறும் ஐ.எஸ்.எல் கால்பந்து தொடர், இன்று கோவாவில் தொடங்கவுள்ளது. முதல் போட்டியில் நடப்பு சாம்பியனான ஏடிகே மோகன் பகான் – கேரளா பிளாஸ்டா்ஸ் அணிகள் மோதுகின்றன. கொரோனா பரவல் காரணமாக கோவாவில் உள்ள ஜவாஹா்லால் நேரு மைதானம், பாம்போலிம்மில் உள்ள ஜிஎம்சி மைதானம், வாஸ்கோவில் உள்ள திலக் மைதானம் ஆகிய 3 இடங்களில் நடைபெறவுள்ளன.
ரசிகர்களுக்கு அனுமதி மறுப்பு:
இந்தியாவில் கொரோனா அச்சம் காரணமாக இந்த போட்டிகளை மைதானத்தில் காண ரசிகர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ள நிலையில், அதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியிலும், டிஸ்னி ஹாட்ஸ்டார் தளத்திலும் காணலாம். நடப்பாண்டில் 115 போட்டிகள் நடைபெறவுள்ளதாகவும், இம்முறை 11 அணிகள் விளையாடவுள்ளதாக கூறப்படுகிறது. இதில் ஜனவரி 11-ம் தேதி வரை நடைபெறும் போட்டிகளுக்கு மட்டுமே அட்டவணை வெளியானது.
11 அணிகள்:
இந்தாண்டு புதிதாக SC ஈஸ்ட பெங்கால் என ஒரு அணி கலந்துகொள்ளவுள்ளது. எப்.சி. கோவா, ஏ.டி.கே. மோகன் பகான், பெங்களூா் எப்.சி., ஜாம்ஷெட்பூா் எப்.சி., சென்னையின் எப்.சி., மும்பை சிட்டி எப்.சி., ஒடிஸா எப்.சி., நாா்த்ஈஸ்ட் யுனைடெட் எப்.சி., கேரளா பிளாஸ்டா்ஸ், ஹைதராபாத் எப்.சி. என மொத்தம் 11 அணிகள் விளையாடவுள்ளது.
சென்னையின் எப்.சி.:
ஐஎஸ்எல் கால்பந்து தொடரின் முன்னணி அணியாக இருப்பது, சென்னையின் எப்.சி. அணி 2015, 2017 என இரண்டு முறை கோப்பையை கைப்பற்றியுள்ளது. சென்னை அணியில் தலைமை பயிற்சியாளரான கிரகோரி மாற்றப்பட்டு, அவருக்கு பதில் புதிதாக ஓவன் கோயல் நியமிக்கப்பட்ட நியமிக்கப்பட்டார். இதனால் அடுத்தடுத்து போட்டிகளில் வெற்றிபெற்று, கொல்கத்தா, கோவா, பெங்களூர் ஆகிய பெரிய அணிகளை லீக் தொடரில் ஓடவிட்டது. நடப்பாண்டில் சென்னை அணி, நவம்பர் 24, 29, டிசம்பர் 4, 9, 13, 19, 26, 29, ஜனவரி 4, 10 ஆகிய தேதிகளில் விளையாடவுள்ளதாக அட்டவணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த போட்டியை காண ரசிகர்கள் தீவிரமடைந்துள்ளனர்.
IPL2024: சென்னை அணி 20 ஓவரில் 7 விக்கெட்டை இழந்து 191 ரன்கள் எடுத்தனர். இதனால் பெங்களூர் அணி 27 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இன்றைய…
சென்னை: ஜம்மு காஷ்மீர் அனந்த்நாக்கில் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிசூடு நடத்தியுள்ளனர். ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் பகுதியில் ஓர் தம்பதி மீது பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியுள்ளனர்.…
சென்னை : ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியானது முடியும் முன்னரே டி20 உலகக்கோப்பை அணியில் இடம் பெற்றுள்ள இந்திய வீரர்கள் நியூயார்க் புறப்பட உள்ளனர். இந்த ஆண்டு ஜூன்…
சென்னை: கனமழை எதிரொலியை தொடர்ந்து சுற்றுலா பயணிகளுக்கு பேரிடர் மேலாண்மைத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது. கடந்த சில நாட்களாக தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில், ஒரு சில…
சென்னை: நாளை காலை பாஜக அலுவலகம் முன்பு அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான…
சென்னை : இன்று நடக்கும் ஐபிஎல் போட்டியில் மழை வரும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், ஒருவேளை மழை குறுக்கிட்டால் ஐபிஎல் போட்டிகளில் ஓவர்கள் எப்படி குறைக்கிறார்கள்…