சந்தூர் இசைக்கருவியில் இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் ஈரான் பெண்மணி…!

சந்தூர் இசைக்கருவியில் இந்திய தேசிய கீதத்தை வாசிக்கும் ஈரான் பெண்மணி. 

நேற்று இந்தியா முழுவதும் 75-வது சுதந்திர தினவிழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இந்நிலையில், ஈரான் நாட்டை சேர்ந்த தாரா கரெமணி என்ற பெண்மணி, இந்திய சுதந்திர தின விழாவை முன்னிட்டு தேசிய கீதமான ஜன கன மன பாடலை சந்தூர் இசை கருவியில் வாசித்துள்ளார்.

இந்த வீடியோவை அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் அவருக்கு பாராட்டுக்களை தெரிவித்து வரும் நிலையில், இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

இது குறித்து அவர் கூறுகையில், இந்தியா முழுவதும் பயணம் செய்து அங்குள்ள மக்களின் அன்பை கண்டேன். அனைவரும் கருணை உள்ளம் கொண்டவர்கள். மகிழ்ச்சியுடன் வாழ்கின்றனர். அவர்களது வரவேற்புக்கு ஈடு இணையே இல்லை. என்று தெரிவித்துள்ளார்.