ஐபிஎல் தொடரின் இன்றைய லக்னோ அணிக்கு எதிரான போட்டியில் பெங்களூரு அணி அதிரடியாக பேட் செய்து 212 ரன்கள் குவிப்பு.
16-வது ஐபிஎல் தொடரின் இன்றைய போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிகள், பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் விளையாடுகின்றன. இதில் டாஸ் வென்ற லக்னோ அணி முதலில் பவுலிங் தேர்வு செய்தது.
இதன்படி முதலில் களமிறங்கிய பெங்களூரு அணியில் கோலி மற்றும் டுபிளெஸ்ஸி ஓப்பனிங் இறங்கி லக்னோ அணியின் பந்துவீச்சை சிதறடித்தனர். இருவரும் பவுண்டரிகள், சிக்ஸர்கள் என விளாசி அடுத்தடுத்து அரைசதம் அடித்தனர்.
Absolute Carnage ????????@faf1307 deposits one out of the PARK ????????
We are in for an entertaining finish here folks!
Follow the match ▶️ https://t.co/76LlGgKZaq#TATAIPL | #RCBvLSG pic.twitter.com/ugHZEMWHeh
— IndianPremierLeague (@IPL) April 10, 2023
விராட் கோலி 61 ரன்கள் அடித்திருந்த நிலையில் அமித் மிஸ்ராவிடம் விக்கெட்டை இழந்தார். அதன்பின் இறங்கிய மேக்ஸ்வெல்(59 ரன்கள்) மேலும் அதிரடி காட்ட, டுபிளெஸ்ஸி(79* ரன்கள்) மறுபுறம் ரன் வேட்டையில் தொடர்ந்தார். தொடர்ந்து சிக்ஸர் விளாசிக்கொண்டிருந்த மேக்ஸ்வெல், கடைசி ஒவரில் மார்க் வுட் வீசிய பந்தில் 59 ரன்களில் போல்டானார்.
முடிவில் பெங்களூரு அணி 20 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 212 ரன்கள் குவித்தது.