IPL RCB vs RR: டாஸ் வென்றது ராஜஸ்தான் அணி; RCB முதலில் பேட்டிங்.!

ஐபிஎல் தொடரின் இன்றைய RCB vs RR போட்டியில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பவுலிங் தேர்வு.

16-வது ஐபிஎல் தொடரின் இன்று இருபோட்டிகள் நடைபெறும் நிலையில், பிற்பகல் 3.30மணிக்கு தொடங்கும் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும்  ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் பெங்களுருவில் உள்ள சின்னசுவாமி ஸ்டேடியத்தில் மோதுகின்றன.

பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் சம பலத்துடன் இருக்கும் பெங்களூரு அணி, தான் விளையாடிய கடைசி போட்டியில் பஞ்சாப் அணியை வெற்றி பெற்று முழு உத்வேகத்துடன் இன்றைய போட்டியை வெல்லும் நோக்கில் உள்ளூர் ரசிகர்கள் ஆதரவுடன் களமிறங்குகிறது.

ராஜஸ்தான் அணியைப் பொறுத்தவரை புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது, மேலும் கடைசிப் போட்டியில் லக்னோ அணியுடன் தோல்வியடைந்ததை அடுத்து, இன்று பெங்களூரு அணியை வெல்லும் முனைப்பில் களமிறங்குகிறது. இதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

ராஜஸ்தான் அணி: ஜோஸ் பட்லர், யஷஸ்வி ஜெய்ஸ்வால், சஞ்சு சாம்சன்(W/C), தேவ்தத் படிக்கல், ஷிம்ரோன் ஹெட்மியர், துருவ் ஜூரல், ரவிச்சந்திரன் அஷ்வின், ஜேசன் ஹோல்டர், டிரென்ட் போல்ட், சந்தீப் சர்மா, யுஸ்வேந்திர சாஹல்

பெங்களூரு அணி: விராட் கோலி (C), ஃபாஃப் டு பிளெஸ்ஸிஸ், மஹிபால் லோம்ரோர், கிளென் மேக்ஸ்வெல், ஷாபாஸ் அகமது, தினேஷ் கார்த்திக் (W), சுயாஷ் பிரபுதேசாய், டேவிட் வில்லி, வனிந்து ஹசரங்கா, முகமது சிராஜ், விஜய்குமார் வைஷாக்

Leave a Comment