INDvsSA : டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா பந்துவீச்சு தேர்வு!

தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது. இதில் இரண்டு போட்டிகள் ஏற்கனவே நடந்து முடிந்துள்ளது. நடந்து முடிந்த அந்த இரண்டு போட்டிகளிலும் இரு அணிகளும் தலா 1 போட்டியில் வெற்றி பெற்று 1-1 என சமநிலையில் உள்ளது.

அதனை தொடர்ந்து இன்று கோப்பை யாருக்கு என்பதனை தீர்மானிக்கும் மூன்றாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டி இன்று பார்லில் உள்ள போலன்ட் பார்க் மைதானத்தில் நடைபெறுகிறது. வெற்றியை பெற்று கோப்பையை வெல்லவேண்டும் என்ற முனைப்பில் இரண்டு அணியும் களமிறங்கியுள்ளது. இந்த போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

தென்னாப்பிரிக்கா அணி 

ரீசா ஹென்ட்ரிக்ஸ், டோனி டி ஸோர்ஸி, ரஸ்ஸி வான் டெர் டுசென், ஐடன் மார்க்ரம்(C), ஹென்ரிச் கிளாசென்(WK), டேவிட் மில்லர், வியான் முல்டர், கேசவ் மகராஜ், நந்த்ரே பர்கர், லிசாட் வில்லியம்ஸ், பியூரன் ஹென்ட்ரிக்ஸ்

இந்திய அணி 

சஞ்சு சாம்சன், சாய் சுதர்சன், ரஜத் படிதார், திலக் வர்மா, கே.எல். ராகுல்(w/c), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், அர்ஷ்தீப் சிங், அவேஷ் கான், முகேஷ் குமார்