அஷ்வின் இல்லாமல் இந்த திட்டம் நிறைவேறி இருக்காது.! விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி புகழாரம்.!

அஷ்வின் இல்லாமல் இந்த திட்டம் நிறைவேறி இருக்காது என சென்னையில் பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு பயிற்சி மையத்தில் அமைச்சர் உதயநிதி பேசினார். 

இன்று சென்னையில உள்ள பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அவர்களுக்கு விளையாட்டில் ஊக்கம் அளிப்பதற்காக கால்பந்து, கிரிக்கெட் விளையாட்டு பயிற்சி கூட்டத்தினை விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.

அஷ்வினுக்கு நன்றி :

இந்த விழாவில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உடன் அமைச்சர் மா.சுப்ரமணியன், இந்திய கிரிக்கெட் அணி வீரர் ரவிச்சந்திரன் அஷ்வின் ஆகியோர் கலந்து கொண்டனர். அதில் பேசிய அமைச்சர் உதயநிதி , கிரிக்கெட் வீரர் அஷ்வினுக்கு தனது நன்றிகளை தெரிவித்து கொண்டார்.

பள்ளி மாணவர்களுக்கு பயிற்சி :

அமைச்சர் உதயநிதி பேசுகையில், இந்திய கிரிக்கெட் அணி வீரர் அஸ்வின் இல்லாமல் இந்த திட்டம் நிறைவேறி இருக்காது. அவர் தான் முதலில் பள்ளி குழந்தைகளுக்கு விளையாட்டு பயிற்சி அளிக்க ஆரம்பிக்க வேண்டும் என முன்னெடுத்தது என குறிப்பிட்டு பேசினார். அதனால் அவருக்கு அமைச்சர் உதயநிதி தனது நன்றியை தெரிவித்து கொண்டார்.

ராஜஸ்தான் அணி வீரர் :

மேலும், அஷ்வின் தற்போது ஐபிஎஸ் போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடுகிறார். அவர் விக்கெட் எடுத்தாலும் நாம் கைதட்டுவோம். நன்கு விளையாடும் வீரர்கள் யாராக இருந்தாலும் தமிழக மக்கள் பாராட்டுவார்கள் என குறிப்பிட்டார். இன்று சாயந்தரம் அவருக்கு ஐபிஎல் போட்டி இருக்கிறது. இருந்தும் நேரம் ஒதுக்கி இந்த விழாவுக்கு வந்ததற்கு நன்றி எனவும் அமைச்சர் உதயநிதி குறிப்பிட்டார். .

ஊராட்சி கிரிகெட் அணிகள் :

அஸ்வின் எப்போதெல்லாம் நேரம் கிடைக்கிறதோ, அப்போதெல்லாம் பயிற்சி அளிக்க வருவதாக கூறியுள்ளார் எனவும் அமைச்சர் தெரிவித்தார். மேலும், கலைஞரின் 100வது பிறந்தநாளை முன்னிட்டு, 42 கோடி ரூபாய் செலவில் தமிழக ஊராட்சி கிரிக்கெட் அணிகளுக்கு கிரிக்கெட் ஸ்போர்ட்ஸ் கிட் (விளையாட்டு பொருட்கள்) கொடுக்க உள்ளோம் எனவும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அந்த விழாவில் தெரிவித்தார்.

Leave a Comment