நான் இன்னும் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவில்லை செரீனா வில்லியம்ஸ் அதிரடி

23 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியனான செரீனா வில்லியம்ஸ் தான் இன்னும் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவில்லை கூறியுள்ளார்.

திங்களன்று செரீனா வில்லியம்ஸ், தான் டென்னிஸிலிருந்து ஓய்வு பெறவில்லை என்றும், கடந்த மாதம் நடந்த யுஎஸ் ஓபனுக்குப் பிறகு விளையாட்டிலிருந்து விலகப் போவதாகக் கூறியதைத் தொடர்ந்து, அவர் திரும்புவதற்கான வாய்ப்புகள் “மிக அதிகம்” என்று கூறியுள்ளார்.

தான் என்ன செய்கிறேன் என்பதை விவரிக்க சிறந்த வார்த்தை “பரிணாமம்” என்றும், தனது குடும்பத்தை வளர்க்க விரும்புவதாகவும்,“ஓய்வு என்ற வார்த்தை எனக்குப் பிடித்ததில்லை.இது ஒரு நவீன வார்த்தையாக எனக்குத் தோன்றவில்லை. நான் இதை ஒரு மாற்றமாக நினைத்துக் கொண்டிருக்கிறேன்,என்று செரீனா வோக் பத்திரிகைக்கு எழுதிய கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

செரீனாவின் இந்த பதில் அவரது ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தை கொடுத்துள்ளது.

Leave a Comment