நான் இறக்கவில்லை உயிரோடுதான் இருக்கிறேன் -ராணுவ வீரர்.!

லடாக் எல்லை பகுதிகளில், இந்திய ராணுவத்துக்கும், சீன ராணுவத்துக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் நேற்று முன்தினம் இந்திய ராணுவம் தரப்பில் 20 ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது. 

இதில், பீகாரை சேர்ந்த சுனில் ராய் என்பவர் உயிரிழந்ததாக  நேற்று முன்தினம் இரவு அவரின் குடும்பத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், நேற்று காலை சுனில் ராய் தனது மனைவிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு தான் உயிருடன் இருப்பதாக கூறியுள்ளார்.

இதனால், சுனில் ராய் வீட்டில் குழப்பம் ஏற்பட்டது. ஆனால், உண்மையாக லடாக்கில் நடைபெற்ற மோதலில் சுனில் குமார் என்ற வீரர் வீரமரணம் அடைந்தார். ஆனால், சுனில் ராய் உயிரிழக்கவில்லை.

இருவருமே பீகார் மாநிலத்தை சார்ந்தவர்கள். சுனில் ராய் சரண் மாவட்டத்தை சார்ந்தவர்.  சுனில் குமார் பாட்னாவில் உள்ள பிஹாட்டாவைச் சேர்ந்தவர். இருவருமே  லடாக்கில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர். இதனால், இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கால்வான் பள்ளத்தாக்கில் பீகாரைச் சேர்ந்த மூன்று வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். அதில் சுனில் குமார், அமன் சிங் மற்றும் குந்தன் குமார்  ஆகியோர் உயிரிழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Recent Posts

‘இது தோனிக்கு கடைசி சீசனா இருக்கும்னு எனக்கு தோணல ..’ ! – ராபின் உத்தப்பா

சென்னை : ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வீரரான ராபின் உத்தப்பா எம்.எஸ்.தோனிக்கு இது கடைசி சீசனாக இருக்காது என கூறி இருக்கிறார்.…

10 mins ago

இனி வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தலாம்… ஆனால் ஒரு கண்டிஷன்.!

சென்னை: வாட்ஸ்அப் மூலம் எளிதில் மின்கட்டணம் செலுத்தும் வசதியை தமிழ்நாடு மின்சார வாரியம் அறிமுகம் செய்துள்ளது. தமிழ்நாடு மின் நுகர்வோர்கள் தாங்கள் பயன்படுத்த்தும் மின்சார அளவீட்டின்படியான கட்டணத்தை…

12 mins ago

அடுத்த 3 நேரத்தில் 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு!

சென்னை: அடுத்த மூன்று மணி நேரத்திற்கு 32 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைக்கு வாய்ப்பு உள்ளது. தென்தமிழக கடலோரப் பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சிநிலவுகிறது.…

13 mins ago

குற்றாலத்தில் வெள்ளம்..அடித்து செல்லப்பட்ட சிறுவன்! அலறி ஓடிய மக்கள்!!

சென்னை : குற்றாலம் அருவி வெள்ளப்பெருக்கில் அடித்துச் செல்லப்பட்ட 17 வயது சிறுவன் மாயம். இந்த மாதம் தொடக்கத்தில் வெயில் வாட்டி வதைத்த நிலையில், கடத்த சில…

41 mins ago

இந்த 11 மாவட்டத்துக்கு கனமழை…3 மாவட்டத்துக்கு மிக கனமழை..வானிலை மையம் அலர்ட்!

சென்னை : இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் இன்று 11 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும்,…

1 hour ago

வைகாசி விசாகம் 2024 இல் எப்போது?

வைகாசி விசாகம் 2024 -இந்த ஆண்டிற்கான வைகாசி விசாகம் எப்போது என்றும்  தேதி, நேரம் மற்றும் அதன் சிறப்புகள் பற்றி இப்ப பதிவில் காணலாம். வைகாசி விசாகம்…

1 hour ago