வரும் 18-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்கிறேன் – சி.பி.ராதாகிருஷ்ணன்

வரும் 18-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்கிறார் சி.பி.ராதாகிருஷ்ணன் 

சமீபத்தில், நாட்டில் உள்ள 13 மாநிலங்களுக்கு புதிய ஆளுநர்களை நியமித்து குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு உத்தரவிட்டிருந்தார். 13 மாநிலங்களுக்கு நியமித்த புதிய ஆளுநர்களில், தமிழ்நாட்டைச் சேர்ந்த பா.ஜ.க மூத்த நிர்வாகியும், முன்னாள் எம்.பி.யுமான சி.பி.ராதாகிருஷ்ணன், ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

ஜார்க்கண்ட் மாநில ஆளுநராக நியமிக்கப்பட்டதை தொடர்ந்து, பாஜக பொறுப்புகளில் இருந்து மூத்த தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் ராஜினாமா செய்துள்ளார்.  சி.பி.ராதாகிருஷ்ணன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளிலிருந்தும் விலகி தனது ராஜினாமா கடிதத்தை பாஜக மாநில தலைவர் அண்ணாமலையிடம் வழங்கினார்.

இந்த நிலையில், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சி.பி.ராதாகிருஷ்ணன் வரும் 18-ஆம் தேதி ஆளுநராக பதவி ஏற்கிறேன் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment