குஜராத் தொங்கு பாலம் விபத்து – தமிழக ஆளுநர் இரங்கல்

குஜராத் தொங்கு பாலம் விபத்து குறித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி இரங்கல். 

குஜராத்தில் மோர்பியில் கேபிள் பாலம் அறுந்து ஆற்றுக்குள் விழுந்துள்ளது. இந்த விபத்தில் 142 பேர் உயிரிழந்துள்ளதாக குஜராத் அரசு தெரிவித்துள்ளது. இந்த விபத்திற்கு அரசியல் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வகையில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி குஜராத் மாநிலம் மோர்பி, என்ற இடத்தில் பாலம் விபத்துக்குள்ளானதில் விலைமதிப்பற்ற உயிர்களை இழந்ததற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்ததோடு, காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என தனது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment