மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வருக்கு கொரோனா தொற்று உறுதி…!

குஜராத் முதல்வர் விஜய் ரூபானிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. 

குஜராத் முதல்வர் விஜய் ரூபானி அவர்கள், வதோதரா பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு, மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். அப்போது அந்த நிகழ்வில் பேசிக் கொண்டிருந்த முதல்வர் திடீரென மயங்கி விழுந்தார். இதனை கவனித்துக் கொண்டிருந்த பாதுகாவலர் விரைந்து வந்து அவரை தாங்கி பிடித்தார்.

இதனை தொடர்ந்து அவருக்கு மேடையிலேயே முதலுதவி அளிக்கப்பட்ட நிலையில், பின் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். இந்நிலையில், அவருக்கு மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தற்போது கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.