பெரும் சோகம்…பிரபல நடிகை தூக்கு போட்டு தற்கொலை.. !

பிரபல போஜ்புரி நடிகை அகன்ஷா துபே தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

நடிகை அகன்ஷா துபே நாயக் என்ற புதிய படத்தில் அவர் நடித்து வந்துள்ளார். இந்த படத்திற்கான படப்பிடிப்பு உத்தர பிரதேசத்தின், வாரணாசி பகுதியில் நடந்து வந்துள்ளது. இன்று காலை 9 மணிக்கு ஷூட்டிங்கிற்காக, மேக் அப் மேன் அவரை அழைக்க சென்றபோது, ஹோட்டல் அறையில் நடிகை தூக்கிட்டு இறந்து கிடந்தார்.

தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தற்கொலைக்கு முன், இன்ஸ்டாகிராமில் நேரலை வீடியோ பதிவிட்டுள்ளார். அதில், அவர் கவலையுடனும், கண்ணீருடனும் காணப்பட்டார். என்ன நடந்தது? என்று ரசிகர்கள் நேரலையில் கேட்டதற்கு, நடிகை எந்த பதிலும் சொல்லவில்லை. அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அகன்ஷா துபே தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Leave a Comment