புவனேஸ்வரில் கொரோனா பரிசோதனைக்கான கட்டணத்தை நிர்ணயித்த ஒடிசா அரசு.!

ஒடிசா மாநிலத்தில் உள்ள புவனேஸ்வரில் 4  தனியார் கொரோனா பரிசோதனை ஆய்வகங்கள் ஐ.சி.எம்.ஆர் வழிகாட்டுதல்களைப் பின்பற்றி புவனேஸ்வர் ஆர்.எம்.ஆர்.சி மேற்பார்வையில் நடத்தப்படுகிறது.

இந்நிலையில், புவனேஸ்வரில் உள்ள  ஐ.சி.எம்.ஆர்-அங்கீகரிக்கப்பட்ட  நான்கு ஆய்வகங்களில் கொரோனா சோதனைக்கான கட்டணத்தை ரூ.1,200 (ஜி.எஸ்.டி மற்றும் அனைத்து  கட்டணங்களையும் உள்ளடக்கியது)  என ஒடிசா அரசு நிர்ணயித்துள்ளது.