கோத்தாபய ராஜபக்சே எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், ‘ இலங்கை அரசுக்கு தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன்’ என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக மக்கள் போராட்டம் வெடித்த நிலையில் முக்கிய அரசியல் தலைவர்கள் இலங்கையை விட்டு வெளியேற துடித்தனர்.
ஆனால், அதிபர் (முன்னாள்) கோத்தபய ராஜபக்சே மட்டும் தப்பித்து தற்போது சிங்கப்பூரில் தஞ்சம் அடைந்துள்ளார். ஆனால் அவர் முறையாக தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்யாமல் சென்றதால் புதிய அரசு அமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது.
அதன் பின்னர், தனது ராஜினாமாவை அங்கிருந்து அனுப்பி, அதில் சில விஷயங்களையும் குறிப்பிட்டுள்ளார். அதில், ‘நாட்டில் ஏற்பட்ட பிரச்னையை தீர்க்க நினைத்தேன். ஆனால் நிலைமை கைமீறி சென்று விட்டது. அதனால் ராஜினாமா செய்தேன். அரசுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் தன்னால் முடிந்த உதவிகளை செய்வேன்.’ எனவும் அதில் குறிப்பிட்டு இருந்தாராம்
இந்த ராஜினாமா கடித்ததை நாடாளுமன்றத்தில் இலங்கை நாடாளுமன்ற செயலர் வாசித்தார். பின்னர் 19ஆம் தேதி காலைக்குள் யாரெல்லாம் அதிபர் பதிவிக்கு போட்டியிட போகிறீர்களோ அவர்கள் மனு அளித்து விடுங்கள்.
20ஆம் தேதி அதிபர் தேர்தலுக்கான வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் நடைபெறும் எனவும் நாடாளுமன்ற செயலர் அறிவித்தார். தற்போது இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே இருக்கிறார்.