#Holiday : மாணவர்களுக்கு குஷியான செய்தி..! தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை…!

தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து ஏப்-16-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவிப்பு.

தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை அளிக்கப்படுவதாக தமிழக பள்ளிக்கல்வி ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் வரும் சனிக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவித்துள்ளார்.

மேலும், தமிழ் புத்தாண்டு, புனித வெள்ளி விடுமுறையை தொடர்ந்து ஏப்-16-ம் தேதியும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. ஏப்-18 ஆம் தேதி முதல் மீண்டும் பள்ளிகள் வழக்கம் போல் செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.