முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ நீதிமன்றத்தில் ஆஜர்..!

கடந்த ஆண்டு மே மாதம் மதுரை மாவட்ட அதிமுக சார்பில் தினமணி திரையரங்கு முன் திமுக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு தலைமை தாங்கினார்.

அப்போது பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு” மின்சார கட்டணத்தை உயர்த்த மாட்டோம், நீட் தேர்வு உடனடியாக ரத்து செய்யப்படும், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் மாத மாதம் ரூ.1000 கொடுக்கப்படும், மாணவர்களுக்குரிய கல்வி கட்டணத்தை உடனடியாக ரத்து செய்வதாகவும் உள்ளிட்ட நிறைவேற்ற முடியாத பொய்யான வாக்குறுதிகளை மக்களிடம் கூறி மக்களை ஏமாற்றி விட்டதாகவும், தமிழகத்தில் ஊழல் முறைகேடுகள், கள்ளச்சாராய மரணம், கொலை, கொள்ளை நடக்கிறது.

செந்தில்பாலாஜிக்கு நீதிமன்ற காவல் 15-வது முறையாக நீட்டிப்பு..!

சட்டம் ஒழுங்கு சீர்கேடுகளை கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டதாகவும் இதனால் திமுக அரசு உடனடியாக பதவி விலக வேண்டும் என தெரிவித்தார். இது அவதுாறு பரப்பும் வகையில் உள்ளதாகவும் செல்லுார் கே.ராஜூ மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என  குற்றவியல் அரசு வழக்கறிஞர் பழனிச்சாமி கடந்த சில வாரங்களுக்கு முன் மதுரை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கை மனு தாக்கல் செய்தார்.

இந்த வழக்கில் செல்லூர் ராஜூ ஜனவரி 11-ம் தேதி( இன்று) நேரில் ஆஜராக நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.  இந்நிலையில், தமிழக முதல்வர் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளார்.