2014, டிசம்பர் 31க்கு முன்னர் அண்டை நாடுகளான பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு புலம்பெயர்ந்துள்ள இஸ்லாமியர்கள் அல்லாதோருக்கு குடியுரிமை வழங்கும்படியான சிஏஏ சட்ட மசோதாவை மத்திய அரசு நிறைவேற்றி இருந்தது. மக்களை மத ரீதியில் பிரிக்கும் முயற்சி என பல்வேறு அரசியல் கட்சியினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். உச்சநீதிமன்றத்திலும் வழக்குகள் நிலுவையில் உள்ளன.
மக்களவை தேர்தலில் காங்கிரஸ் 40 இடங்களில் வெல்ல முடியுமா? மம்தா பானர்ஜி கடும் தாக்கு
இந்த குடியுரிமை திருத்த சட்டம் இன்னும் 7 நாட்களில் நிறைவேற்றப்படும் என மத்திய இணையமைச்சர் சாந்தனு தாகூர் அண்மையில் கூறி மீண்டும் இந்த சட்டம் குறித்த பரபரப்பை ஏற்படுத்திவிட்டார். இதற்கு மீண்டும் அரசியல் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் இதுகுறித்த கேள்விக்கு அதிமுக முன்னர் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனும் பதில் கூறினார்
அவர் திண்டுக்கல்லில் நேற்று செய்தியாளர்களிடம் பேசுகையில், இந்த சட்ட திருத்தம் பற்றி எங்கள் அதிமுக பொதுச்செயலாளர் “எடப்பாடி பழனிசாமி” என்பதற்கு பதிலாக “அண்ணாமலை” என தவறுதலாக கூறி, ஏற்கனவே அறிக்கை மூலம் பதில் அளித்துவிட்டார் என்று பேசினார். திமுக எம்எல்ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி திண்டுக்கல்லில் நடைபெற்ற நேற்றைய போராட்டம் முடிந்து செய்தியாளர்களிடம் திண்டுக்கல் சீனிவாசன் இவ்வாறு பேசினார்.
அவர் மேலும் கூறுகையில், பாஜகவை அழிக்கும் வரை நாங்கள் ஓய மாட்டோம். பிரதமர் வேட்பாளரை அறிவிக்காமலேயே ஜெயலலிதா தலைமையில். 37 எம்பி-க்களை மக்கள் அதிமுகவுக்கு தந்தார்கள். இந்த முறை எடப்பாடி பழனிச்சாமி தலைமைக்கு 39 எம்பிக்கள் கிடைக்கும் என்றும் பேசினார் திண்டுக்கல் சீனிவாசன்.
சென்னை : ஸ்டண்ட் காட்சி ஒன்றில் நடிகர் விஜய் பாம் பிளாஸ்ட்லிருந்து ஜஸ்ட் மிஸ்-ஸில் தப்பித்து இருக்கிறார். சினிமாவில் படங்களில் இருக்கும் ஸ்டண்ட் காட்சிகள் நாம் பார்ப்பதற்கு…
சென்னை: குலசையில் விண்வெளி பூங்கா அமைக்கப்பட உள்ளதற்கான அறிவிப்பை டிட்கோ வெளியிட்டுள்ளது. இந்தியாவின் ராக்கெட் ஏவுதளமாக செயல்படும் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவை அடுத்து இரண்டாவதாக தூத்துக்குடி மாவட்டம்…
சென்னை: கடந்த சில நாள்களாக ஆபரணத் தங்கத்தின் விலை உயர்ந்து கொண்டே சென்ற நிலையில், இன்று குறைந்துள்ளது. சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக…
சென்னை : தமிழகத்தில் அடுத்த 3 மணி நேரத்திற்கு 9 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை மையம் தகவலை தெரிவித்துள்ளது. கடந்த சில…
சென்னை : தமிழகத்தில் தற்போது கோடை மழை பெய்து வருவதால் மின் உபயோகமானது குறைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் வெயிலானது வாட்டி வதைத்து வந்த…
சென்னை: மக்கள் மறந்த ரேடியோ, தபால் நிலையத்தை நினைவூட்டியவர் பிரதமர் மோடி. - தமிழிசை பேட்டி. புதுச்சேரி முன்னாள் துணைநிலை ஆளுநரும், தென் சென்னை மக்களவை தொகுதி…