2 மணிக்கு ஜப்தி நோட்டீஸ்.! 3 மணிக்கு லாட்டரி ஜாக்பாட்.! இன்ப அதிர்ச்சியில் கேரளா பூக்குஞ்சு.!

கடனில் மூழ்கிய வீட்டை மீட்க முடியாமல் திணறிய கேரள மீன் வியாபாரிக்கு அடித்த லாட்டரியால் இன்ப வெள்ளத்தில் மிதந்தார்.

கேரளாவில் மைநாகப்பள்ளி, எடவனாசேரி அருகே பூக்குஞ்சு என்ற நபர் மீன் வியாபாரம் செய்து வருபவர், அவர் தன் வீட்டிற்காக 7 வருடங்களுக்கு முன் வாங்கிய கடன் 7.5 லட்சம் ரூபாயை கட்ட முடியாமல் அது தற்போது 9 லட்சகமாக வட்டியுடன் சேர்ந்து அதிகரித்துள்ளது. கடனைக் கட்ட முடியாததால் வங்கியிடமிருந்து, புதன் கிழமை 2 மணிக்கு பூக்குஞ்சுவுக்கு ஜப்தி நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இதனால் சோர்ந்து போய் வீட்டை இழந்து விடுவோமோ என்று வருத்தத்தில் இருந்த பூக்குஞ்சுவுக்கு, அடுத்த ஒருமணி நேரத்தில் அதிர்ஷ்டம் கதவைத் தட்டியது. அவர் ஏற்கனவே வாங்கிய லாட்டரியில் பரிசுத்தொகையாக 75 லட்சம் வென்றுள்ளார் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது.  கேரளாவில் லாட்டரி இன்னும் தடை செய்யப்படவில்லை என்பதால் பூக்குஞ்சுவுக்கு அடித்த அதிர்ஷ்டம் என்றே சொல்லலாம்.

Leave a Comment