சிரித்த முகத்துடன் சிக்கல்களை எதிர்கொள்ளுங்கள்.! ஆளுநர் ஆர்,என்.ரவி பேச்சு.!

உங்களுக்கு வரும் சிக்கல்களை சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள வேண்டும். IAS நேர்முக தேர்வு எழுதப்போகும் நபர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி அறிவுரை. 

தமிழகத்தில் இருந்து இந்திய குடிமையியல் பணிக்கான (IAS தேர்வில் வெற்றி பெற்றவர்கள்) நேர்முக தேர்வில் பங்கேற்க உள்ள 80 பேருடன் இன்று ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துரையாடினார்.

அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, அவர்களுக்கு பல்வேறு அறிவுரைகளை வழங்கினார். அப்போது உங்களுக்கு வரும் சிக்கல்களை சிரித்த முகத்துடன் எதிர்கொள்ள வேண்டும் என த்னது அறிவுரையை வழங்கினார்.

முன்னதாக நேற்று, சட்டப்பேரவையில் ஆளுநரின் நடவடிக்கைகள் தற்போது வரை அரசியல் பேசுபொருளாக இருப்பது குறிப்பிடதக்கது.

Leave a Comment