Breakfast Scheme:முதலமைச்சரின் காலை உணவு திட்டம் 500 கோடியில் விரிவாக்கம் – நிதியமைச்சர்

முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் 500 கோடி ரூபாய் செலவில், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவிப்பு. 

கடந்த வருடம் செப்டம்பர் 15-ஆம் தேதி மதுரை ஆதிமூலம் பிள்ளை தெருவில் உள்ள மாநகராட்சி தொடக்கப்பள்ளி முதலமைச்சரின் காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்தார்.

காலை உணவு திட்டம் விரிவாக்கம் 

இந்த நிலையில், இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ள பட்ஜெட்டில், முதல்வரின் காலை உணவு திட்டத்தால் அரசு பள்ளிகளில் மாணவர்களின் வருகை பதிவு உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள 30,122 அரசு தொடக்க பள்ளிகளில் , முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் 500 கோடி ரூபாய் செலவில், 18 லட்சம் மாணவர்கள் பயன்பெறும் வகையில் விரிவுபடுத்தப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்துள்ளார். 

Leave a Comment