பரபரப்பு..! ஜல்லிக்கட்டு வழக்கு – சற்று நேரத்தில் தீர்ப்பு!

ஜல்லிக்கட்டு வழக்கில் இன்னும் சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம்.

ஜல்லிக்கட்டு தொடர்பான வழக்கில் இன்னும்  சற்று நேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது உச்சநீதிமன்றம். நீதிபதி கேஎம் ஜோசப் தலைமையில் 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு சற்றுநேரத்தில் தீர்ப்பு வழங்குகிறது.

ஜல்லிக்கட்டுக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் கொண்டு வந்த சட்டங்களுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்க உள்ளது. ஜல்லிக்கட்டு வழக்கில் உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு ஒருமித்த தீர்ப்பு வழங்க உள்ளது. ஜல்லிக்கட்டு அவசர சட்டம், ஜல்லிக்கட்டு போட்டிக்கு தடைகோரி பீட்டா உள்ளிட்ட அமைப்புகள் வழக்கு தொடுத்துள்ளன.