கொல்கத்தாவில் பரபரப்பு.! பான் மசாலா பாக்கெட்டுகளில் அமெரிக்க டாலர்கள்..

கொல்கத்தா விமான நிலையத்தில் பான் மசாலா பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த அமெரிக்கன் டாலர்களின் வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

கொல்கத்தா விமான நிலையத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்த சோதனையின் போது பான் மசாலா பாக்கெட்டுகளில் மறைத்து வைத்து வைத்திருந்த 40,000 அமெரிக்க டாலர் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. கொல்கத்தாவிலிருந்து பாங்காக்கிற்குப் புறப்படத் திட்டமிட்டிருந்த நபர் ஒருவர் வழக்கமாக விமான நிலையத்தில் செய்யப்படும் செக்-இன்-க்காக சோதனை சாவடியில் தனது பொருட்களை வைத்திருந்தார்.

சோதனை முடிவில் அவரது சூட்கேசில் பான் மசாலா பாக்கெட்டுகள் இருப்பதை கவனித்த  சுங்க அதிகாரிகள் அவரை தடுத்து சூட்கேசை சோதனை செய்தனர். அதில் இருந்த பான் மசாலா பாக்கெட்டுகளில் மறைத்து வைத்திருந்த ரூ.32 லட்சம் ($40,000) மதிப்புள்ள அமெரிக்க டாலர் நோட்டுகளை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்து அந்த நபரை கைது செய்தனர். இச்சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Comment