மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள ஈவிகேஎஸ் இளங்கோவன்..! நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்தார். 

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் எம்.எல்.ஏ ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நெஞ்சுவலி காரணமாக நேற்று சென்னை போரூரில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை நலம் விசாரித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் 

மருத்துவமனையில், மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சையளித்து வருகின்றனர். அவசர சிகிச்சை பிரிவில் இருந்த ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் சாதாரண வார்டுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும், அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும் அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் தகவல் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அவர்கள் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார். மேலும், அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் குறித்து மருத்துவரிடம் கேட்டறிந்தார்.

Leave a Comment