மக்கள் என்னை தூக்கி எறிந்தாலும், சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் மக்களுக்கு சேவை செய்வேன் – விஜயபிரபாகரன்

மக்கள் என்னை தூக்கி எறிந்தாலும், சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் மக்களுக்கு சேவை செய்வேன் என்று விஜயபிரபாகரன் தெரிவித்துள்ளார். 

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அவர்கள் நேற்று தனது பிறந்தநாளை கொண்டாடினார். இந்நிலையில், தன்னை யாரும் நேரில் சந்தித்து வாழ்த்து கூற வேண்டாம் என்றும், தனது பிறந்தநாளில் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யுமாறும் கேட்டுக் கொண்டார்.

இந்நிலையில்,  விஜயகாந்த் அவர்களின் பிறந்தநாளை, தேமுதிகவினர் வறுமை ஒழிப்பு தினமாக  கொண்டாடுகின்றனர். இதனையடுத்து, திருப்பூரில் நேற்று நடைபெற்ற விழாவில் கலந்துகொண்ட, விஜயகாந்தின் மூத்தமகன் விஜயபிரபாகரன், மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த கூட்டத்தில் பேசிய அவர், மக்கள் என்னை தூக்கி எறிந்தாலும், சுவற்றில் அடித்த பந்து போல மீண்டும் மக்களுக்கு சேவை செய்வேன் என்றும், விஜயகாந்த் நலமாக உள்ளதாகவும், விரைவில் வெளிநாட்டிற்கு சிகிச்சைக்கு செல்ல இருப்பதாகவும், விஜயகாந்த் மீண்டும் பழைய கெம்பீரத்துடன் திரும்புவார் என்றும் தெரிவித்துள்ளார்.