முதல்வர் தலைமையில் “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்பு..!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், “சமத்துவ நாள்” உறுதிமொழி ஏற்பு. 

அண்ணல் அம்பேத்கரின் 133-வது பிறந்த நாளை முன்னிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் சென்னை தலைமைச் செயலக இராணுவ அணிவகுப்பு மைதானத்தில் “சமத்துவ நாள்” உறுதிமொழி எடுக்கப்பட்டது.

இதற்காக பேரவை நிகழ்வுகள் ஒத்திவைக்கப்பட்டு, 11.15 மணிக்கு மீண்டும் கூடும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். முன்னதாக, முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அம்பேத்கர் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

Leave a Comment