அவசரகால கதவை திறந்த விவகாரம்.! உருட்டாமல் இருந்தால் சரி.! அமைச்சர் செந்தில் பாலாஜி டிவீட்.!

வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்று என உருட்டியது போல, சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி. -அமைச்சர் செந்தில் பாலாஜி.  

திருச்சி விமான நிலையைத்தில் கடந்த டிசம்பர் 10ஆம் தேதி இண்டிகோ விமானத்தில் பயணிக்கையில் 2 தேசிய கட்சி பிரமுகர்கள் அவசரகால கதவை திறந்ததால், அங்கு சலசலப்பு ஏற்பட்டது மேலும், விமானம் புறப்படும் நேரமும் சுமார் 2 மணிநேரத்திற்கு மேலாக தாமதமானது.

இந்த விவகாரம் தொடர்பாக, தற்போது விமானத்துறை அமைச்சகம் சம்பந்தப்பட்ட 2 தேசிய கட்சி பிரமுகர்களிடம் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

இந்த நடவடிக்கையை குறிப்பிடும் வகையில் அமைச்சர் செந்தில் பாலாஜி தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த சம்பவத்தை விமர்சிக்கும் வகையில் டிவீட் செய்துள்ளார். அதில்,’ 2 ஆர்வக்கோளாறுகள் விமானத்தின் அவசரகால கதவை திறந்து விளையாடியது பற்றி டிச-29 அன்று நான் கேள்வியெழுப்பி இருந்தேன். இன்று அதனை விமான போக்குவரத்து அமைச்சகம் (DGCA) விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. என குறிப்பிட்டு,

‘ வெளிநாட்டு வாட்ச் கட்டுவது தேசப்பற்று என உருட்டியது போல, சுதந்திர காற்றை சுவாசிக்க கதவை திறந்தேன் என உருட்டாமல் இருந்தால் சரி.’ என விமர்சித்துள்ளார் அமைச்சர் செந்தில் பாலாஜி.

Leave a Comment