சினிமா

ஜெயிலில் போட வேண்டும் என கூறிய டாக்டர்.. சமந்தா வேதனை பதிவு.!

சமந்தா : நடிகை சமந்தா, மயோசைட்டிஸ் என்கிற அரிய வகை நோய் பாதிப்பு காரணமாக சிகிச்சை மேற்கொண்டு வருகிறார். இது தொடர்பாக, தனது சமூக வலைத்தகங்களிலும் தான் எடுத்து வரும் சிகிச்சைகள் குறித்து பதிவிட்டு வருகிறார். சமீபத்தில், அவர் தனது உடல் நலம் சார்ந்த பிரச்சனைகளுக்கு ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷன் பரிந்துரைத்து ஒரு வீடியோ வெளியிட்டது சர்ச்சைக்குள்ளானது.

அந்த பதிவை வன்மையாக கண்டித்த ஒரு மருத்துவர், சில கருத்துக்களை பகிர்ந்து கொண்டு ஜெயிலில் போட வேண்டும் என கூறினார். இப்பொது, டாக்டர் அவ்வாறு கூறியதற்கு சமந்தா வேதனையுடன் கேள்வி கேட்டு இன்ஸ்டாகிராமில் நீண்ட விளக்கத்தை சுமார் 3 பக்கங்களுக்கு கொடுத்துள்ளார்.

சமந்தாவின் சர்ச்சைக்குள்ளான பதிவு : 

பொதுவான வைரஸ் தொற்றுக்கு சிகிச்சையளிப்பதற்காக ஹைட்ரஜன் பெராக்சைடு நெபுலைசேஷனைப் பயன்படுத்துமாறு அவர் பரிந்துரைத்திருந்தார், மேலும் அவர் சிகிச்சையில் ஈடுபடும் புகைப்படத்தையும் வெளியிட்டு இருந்தார்.

Samantha – Instagram,[File Image]
மருத்துவரின் பதிவு : 

ஹெபடாலஜிஸ்ட் இந்த நெபுலைசேஷன் முறை, ஆரோக்கியத்தில் பாதகமான விளைவுகளை ஏற்படுத்தும் என்று கூறியது மட்டுமல்லாமல், சமந்தாவை “உடல்நலம் மற்றும் அறிவியல் படிப்பறிவற்றவர்” என்று கூறினார். அதோடு, இது போல பொது சுகாதாரத்தை ஆபத்தில் ஆழ்த்தியதற்காக நடிகைக்கு “அபராதம் விதிக்கப்பட வேண்டும் அல்லது ஜெயிலில் தள்ளப்பட வேண்டும்” என்று காட்டமாக தெரிவித்திருந்தார்.

 

சமந்தாவின் விளக்கம் :

கடந்த இரண்டு ஆண்டுகளில், நான் பல வகையான மருந்துகளை உட்கொள்ள வேண்டியிருந்தது. நான் கடுமையாக அறிவுறுத்தப்பட்ட அனைத்தையும் முயற்சித்தேன். இந்தச் சிகிச்சைகள் பலவும் மிகவும் விலை உயர்ந்தவை. நான் எவ்வளவு அதிர்ஷ்டசாலி என்பதை நான் எப்போதும் நினைத்துக் கொண்டிருப்பேன்.

தற்போது இருக்கும் மருத்துவ முறைகள் மிகவும் விலையுயர்ந்ததாக உள்ளது. அனைவராலும் இவ்வளவு செலவு செய்ய முடியுமா என்பது கேள்விக்குறியே. என்னை போல இந்த நோயின் தாக்கத்தினால் அவதிப்படுபவர்களுக்கு உதவவே இந்த பதிவுகளை வெளியிடுகிறேன். இது பணம் சம்பாதிக்கும் நோக்கத்திற்காக செய்யப்படுவது அல்ல என காட்டமாக பதிவிட்டுள்ளார்.

ஆனால், ஒரு ஜென்டில்மேன் ஒரு மருத்துவர் எனது பதவியையும் எனது நோக்கங்களையும் வலுவான வார்த்தைகளால் தாக்கியுள்ளார். ன்றும் கூறினார். அவருடைய நோக்கங்கள் உன்னதமானவை என்று நான் உறுதியாக நம்புகிறேன். அவர் தனது வார்த்தைகளால் தூண்டிவிடாமல் இருந்திருந்தால், அது அவருக்கு இரக்கமாகவும் இருந்திருக்கும்.  குறிப்பாக நான் சிறையில் தள்ளப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.

சிறையில் அடைக்கும் அளவிற்கு நான் என்ன தவறு செய்தேன்? எனது உடல்நிலை பாதிப்பிற்கான சிகிச்சைக்கு கோடிக்கணக்கான ரூபாய் செலவு செய்து எந்த பயனும் இல்லை. ஆனால், மாற்றுமுறை மருத்துவத்தில் எனது உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டது எனக்கு பலன் கிடைத்த மாற்றுமுறை மருத்துவத்தை ரசிகர்களுக்கு பரிந்துரை செய்கிறேன்.

இந்த சிகிச்சையை டிஆர்டிஓவில் 25 ஆண்டுகள் பணியாற்றிய உயர் தகுதி வாய்ந்த மருத்துவரால் பரிந்துரைக்கப்பட்டது. நான் ஒரு பிரபலமாக இல்லாமல் மருத்துவ சிகிச்சை தேவைப்படும் ஒருவனாக பதிவிட்டுள்ளேன். எனினும் எதிர்காலத்தில் கவனத்துடன் பதிவுகளை வெளியிடுவேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Recent Posts

குளத்தில் குளிக்காதீங்க.. மூளையை தின்னும் அமீபா! அரசு கடும் எச்சரிக்கை.!

சென்னை : அமீபிக் மெனிங்கோஎன்செபாலிடிஸ் என்னும் அரியவகை மூளை தொற்றுநோய் பரவல் தொடர்பாக, தமிழகத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அனைத்து மாவட்டங்களுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த…

4 mins ago

உலகநாயகனுக்கு இந்தியன் 1க்கு கிடைத்த பெருமைகள் இந்தியன் 2வில் கிடைக்குமா.?

இந்தியன் : மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இந்தியன் 2 திரைப்படம் வரும் ஜூலை 12-ஆம் தேதி வெளியாகிறது. முதல் பாகம்  அளவிற்கு இருக்குமா? என்று தான் பலரும்…

9 mins ago

மும்பை கனமழை : பள்ளி கல்லூரிகள் விடுமுறை … மீட்புப்பணிகள் தீவிரம் …!

மும்பை : மும்பை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் அதிகனமழை பெய்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து வரும் நிலையில் மகாராஷ்டிராவில்…

22 mins ago

இன்று அதிகாலை புத்தமத வழக்கப்படி ஆம்ஸ்ட்ராங் உடல் நல்லடக்கம்.!

சென்னை: பகுஜன் சமாஜ்வாடி கட்சி மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் உடலானது பொத்தூரில் இன்று அதிகாலை 1 மணியளவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூலை 5) அன்று…

38 mins ago

அபிஷேக் – ருதுராஜ் அசத்தல்..! விட்டதை பிடித்த இந்திய அணி …100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

ZIMvsIND : இன்று நடைபெற்ற இந்தியா-ஜிம்பாப்வே அணி இடையேயான 2-வது டி20 போட்டியில் இந்திய அணி 100 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது. நடைபெற்றுக் கொண்டிருக்கும் இந்தியா, ஜிம்பாப்வே…

14 hours ago

மக்களே ..! நாளை மின்தடை ஏற்படும் இடங்கள் ..!

மின்தடை  : நாளை ( ஜூலை 8/7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். வடக்கு கோவை துடியலூர், வடமதுரை, அப்பநாயக்கன்பாளையம்,…

20 hours ago