அப்பாகிட்ட அப்படி கேட்டுருக்க வேண்டாம் – ஐஸ்வர்யா ரஜினிகாந்த் வருத்தம்!

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில், விஷ்ணு விஷால், விக்ராந்த், கபில்தேவ் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் ‘லால் சலாம்’. இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடித்துள்ளார்.

நேற்றைய தினம் படத்தின் டிரெய்லர் வெளியானது, கிரிக்கெட் விளையாட்டு பின்னணியில் இந்து, முஸ்லீம் இடையே மதநல்லிணக்கத்தை பேசும் படமாக இருக்கும் என்று டிரெய்லரில் தெரிகிறது.  இந்த திரைப்படம் வரும் பிப்ரவரி 9-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. படம் வெளியாக இன்னும் சில நாட்கள் மட்டுமே இருக்கும் நிலையில், படத்தின் ப்ரோமோஷன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

அதன் ஒரு பகுதியாக நேற்று படத்தின் ட்ரைலரும் வெளியிடப்பட்டது. இந்நிலையில், நேற்று லால் சலாம் படத்தின் டிரைலர் வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் படத்தில் நடித்த பிரபலங்கள் பலரும் கலந்துகொண்டார்கள். அதில் கலந்துகொண்டு பேசிய  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் சற்று வருத்தத்துடன் பேசி இருக்கிறார்.

முதன் முதலாக ரிலீஸுக்கு முன்பு நிம்மதியா தூங்கப் போறேன்! விஸ்ணு விஷால் எமோஷனல்!

விழாவில் பேசிய ஐஸ்வர்யா ரஜினிகாந்த் , “அப்பா அரசியல் பேசியோ, அவர் நம்பாத விஷயத்தை பேசியோ படம் ஓட வேண்டிய அவசியம் இல்லை என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். லால் சலாம் இசை வெளியீட்டு விழாவில் சங்கி தொடர்பாக நான் பேசியதைப் பற்றி அப்பாவிடம் கேட்கிறார்கள்.

நான் என்ன மேடையில் பேசினேன் என்பதே அவருக்கு தெரியாது. ஆனாலும் அந்த கேள்விக்கு அவர் பதிலளித்தார். மேலும், அப்பாவிடம் அந்த கேள்வியை தவிர்த்திருக்கலாம்” என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

Leave a Comment