“கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க முடியாது என்றால், இந்திய வீரர்கள் யாரும் விளையாட வர வேண்டாம்” என குயிண்ட்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ் தெரிவித்துள்ளார்.
ஆஸ்திரேலியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய அணி ஒருநாள், டி-20, டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. ஒருநாள் மற்றும் டி-20 போட்டிகள் முடிவடைந்ததை தொடர்ந்து, நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை விளையாடி வருகிறது. இதில் 1-1 என்ற கணக்கில் இரு அணிகளும் சமனில் உள்ள நிலையில், மூன்றாம் டெஸ்ட் போட்டி வரும் 7 ஆம் தேதி சிட்னியில் நடைபெறவுள்ளது. இதனால் சிட்னி சென்றடைந்த இந்திய அணி, தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன், இந்திய அணியின் துணை கேப்டன் ரோகித் சர்மா, பிரித்வி ஷா, நவதீப் சைனி, சுப்மன் கில் மற்றும் ரிஷப் பந்த் ஆகிய வீரர்கள், கொரோனா விதிகளை மீறி உணவகத்திற்கு சென்றது, சர்ச்சை வெடித்தது. இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளத்தில் வைரலான நிலையில், விதிகளை மீறிய அவர்களை தனிமைப்படுத்தப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்தநிலையில், நான்காவது டெஸ்ட் போட்டி நடைபெறவுள்ள குயிண்ட்ஸ்லேண்ட் மாகாணத்தின் சுகாதரத்துறை அமைச்சர் ரோஸ் பேட்ஸ், “கொரோனா விதிமுறைகளை கடைபிடிக்க முடியாது என்றால், இந்திய வீரர்கள் யாரும் விளையாட வர வேண்டாம்” என தெரிவித்துள்ளார். அமைச்சரின் இந்த கருத்தால் பிசிசிஐ அதிருப்தி தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
சென்னை: ஆபரணத் தங்கத்தின் விலை மீண்டும் ரூ.55 ஆயிரத்தை நெருங்கியதால் மக்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். சர்வதேச கச்சா எண்ணெய் ஏற்றுமதி மற்றும் இறக்குமதி காரணமாக பெட்ரோல் மற்றும் டீசல்…
சென்னை : நேற்று நடைபெற்ற போட்டியில் மும்பை அணி தோல்வியடைந்த பிறகு மும்பை அணியின் கேப்டனான ஹர்திக் பாண்டியா தோல்வியடைந்ததற்கு இதுதான் காரணம் என கூறி பேசி இருந்தார்.…
சென்னை: ஆந்திரவில் நெடுஞ்சாலையில் நிகழ்ந்த பயங்கர சாலை விபத்தில் 5 பேர் உயிரிழந்தனர். ஆந்திர மாநிலம் அனந்தபூர் அருகே குத்தி என்ற இடத்தில் கட்டுப்பாட்டை இழந்த கார்,…
சென்னை : குஜராத்தில் 5 ரூபாய் லஞ்சம் வாங்கிய கணினி ஆபரேட்டரை லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடியாக கைது செய்துள்ளது. குஜராத் அகமதாபாத்தின் ஜாம்நகர் மாவட்டத்தில் மோர்கண்டா கிராம…
சென்னை: ஸ்வாதி மாலிவால் விவகாரம் பாஜகவின் சதி என ஆம் ஆத்மி விளக்கம் அளித்துள்ளது. கடந்த மே 13ஆம் தேதி டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வீட்டிற்கு…
சென்னை: 5ஆம் கட்ட தேர்தல் நடைபெற உள்ள மாநிலங்களில் இன்று மாலை 5 மணியுடன் பரப்புரை நிறைவடைகிறது. 5 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் உட்பட 49…