Categories: சினிமா

கரெக்சன் சொல்லிக்கொண்டே இருந்த தனுஷ்! கடுப்பாகி சந்தானம் கிட்ட கிளம்பிய இயக்குனர்?

நடிகர் தனுஷ் கேப்டன் மில்லர் திரைப்படத்தை தொடர்ந்து அடுத்ததாக தன்னுடைய 50-வது படத்தை அவரே இயக்கி அவரே நடித்து வருகிறார். இதற்கிடையில், ‘கட்டா குஸ்தி’ திரைப்படத்தை இயக்கி இருந்த இயக்குனர் செல்ல அய்யாவுவிடம் ஒரு கதையை நடிகர் தனுஷ் கேட்டாராம். செல்ல அய்யாவு விஸ்ணு விஷாலை வைத்து இயக்கி இருந்த ‘கட்டா குஸ்தி’  திரைப்படம் பெரிய அளவில் வெற்றிபெற்று வசூல் ரீதியாக மிகப்பெரிய ஹிட் ஆகி இருந்தது.

இந்த வெற்றியை தொடர்ந்து ஒரு அருமையான கதையை செல்ல அய்யாவு தனுஷை சந்தித்து கதையையும் கூறினாராம். முதல் முறை கேட்டவுடன் தனுஷ் ஒரு கரெக்சன் சொன்னாராம், பிறகு அந்த கரெக்சனை சரி செய்துவிட்டு மீண்டும் தனுஷிடம் கதையை கூறும் போதும் தனுஷ் கரெக்சன் சொன்னாராம். அதன்பிறகு மீண்டும் மீண்டும் இப்படி கரெக்சன் சொல்லிக்கொண்டே தனுஷ் இருந்தாராம்.

ஓரு கட்டத்திற்கு மேல் சற்று கடுப்பான இயக்குனர் செல்ல அய்யாவு தனுஷிடம் கதையை கூறுவதை நிறுத்துவிட்டு அந்த படத்தில் இருந்தே விலகி விட்டாராம்.  தற்போது தனுஷை தொடர்ந்து நடிகர் சந்தானத்திடம் ஒரு கதையை அவர் கூறியிருக்கிறாராம். அவர் கூறிய அந்த கதை காமெடி கதைக்களத்தை வைத்து நகர்வதால் அது தனக்கு செட் ஆகும் என யோசித்து அதில் நடிக்கவும் சந்தானம் சம்மதம் தெரிவித்து விட்டாராம்.

சந்தானம் தற்போது சில படங்களில் நடித்து வருகிறார். எனவே, அந்த படங்களை நடித்துமுடித்துவிட்டு உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன் என செல்ல அய்யாவுவிடம் கூறிவிட்டாராம். இதனால் செல்ல அய்யாவும் சந்தனத்தை வைத்து இயக்கும் படத்திற்கான வேலைகளில் இறங்கி இருக்கிறாராம். விரைவில் இந்த படத்திற்கான அறிவிப்பும் வெளியாகவிருக்கிறதாம்.

ஏற்கனவே, செல்ல அய்யாவு இயக்கிய ‘கட்டா குஸ்தி’ திரைப்படம் மக்களுக்கு மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று அனைவரையும் வயிறு குலுங்க சிரிக்க வைத்தது. இந்த சூழலில், அவர் சந்தானத்தை வைத்து ஒரு படத்தை இயக்குவதாக வெளியான தகவல் அந்த படத்தின் மீது எதிர்பார்ப்பை தூண்டி இருக்கிறது.

Recent Posts

ஊழல்வாதி என நிரூபித்தால் என்னை தூக்கிலிடுங்கள்..! பிரதமர் மோடி ஆவேசம்.!

சென்னை : என்னை ஊழல்வாதி என நிரூபித்தால் தூகிலுடுங்கள் என்று ஆவேசமாக பிரதமர் மோடி அவர்கள் பேசி இருப்பது தற்போது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நாடாளுமன்றத் தேர்தல் நாடெங்கும்…

31 mins ago

டெல்லி மதுபான கொள்கை வழக்கு.! குற்றப்பத்திரிகையில் முதன் முதலாக அரவிந்த் கெஜ்ரிவால் பெயர்.!

சென்னை: டெல்லி மதுபான கொள்கை வழக்கிற்கான குற்றப்பத்திரிகையில் அரவிந்த் கெஜ்ரிவால், ஆம் ஆத்மி கட்சி பெயர்கள் சேர்க்கப்பட்டுள்ளன. கடந்த 2021 ஆம் ஆண்டு டெல்லியில் ஆளும் ஆம்…

37 mins ago

பைக் பஞ்சர் ஆச்சுன்னா அஜித் என்ன செய்வாரு தெரியுமா? என்னங்க இந்த விஷயத்தை நம்பவே முடியல!!

சென்னை : பைக் பஞ்சர் ஆனால், அஜித் பைக்கை அந்த இடத்திலே நிறுத்திவிட்டு சென்றுவிடுவார் என தகவல்கள் வெளியாகியுள்ளது. நடிகர் அஜித்குமார் பொதுவாகவே பைக் மீது அதிகம்…

46 mins ago

மின்சரம் தாக்கி செயலிழந்த சிறுவனின் இதயம்.. நொடி பொழுதில் உயிரை மீட்ட மருத்துவர்.! வைரல் வீடியோ..

சென்னை: மின்சாரம் தாக்கி சுயநினைவை இழந்த சிறுவனைCநொடி பொழுதில் காப்பாற்றிய பெண் மருத்துவர் வீடியோ வைரலாகி வருகிறது. ஆந்திர மாநிலத்திலுள்ள விஜயவாடா நகரத்தில் அய்யப்பா நகரில் மின்சாரம்…

56 mins ago

மழை நேரத்தில் ஏசி போடலாமா? நிபுணர்கள் கூறுவது என்ன ?

சென்னை : மழை பெய்யும் நேரத்தில் ஏசியை உபயோகப்படுத்தலாமா கூடாதா ? மழை பெய்யும் பொழுது பயன்படுத்தினால் என்ன ஆகும் என்பதை பற்றி இந்த தகவலில் நாம்…

1 hour ago

சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல்.! திருச்சி நீதிமன்றம் உத்தரவு.!

சென்னை: சவுக்கு சங்கருக்கு மே 28வரையில் நீதிமன்ற காவல் விதித்தது திருச்சி குற்றவியல் நீதிமன்றம். பெண் போலீசார் பற்றி அவதூறாக பேசியாக யூ-டியூபர் சவுக்கு சங்கர் மற்றும்…

1 hour ago