வயகராவை மதுபானத்தில் கலந்து சாப்பிட்ட நபர்.! பின்னர் நடந்த விபரீதம்.! வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்.!

41 வயது நபர் ஒருவர் வயகரா மாத்திரையை மதுபானம் கலந்து சாப்பிட்டதால் உயிரிழந்துள்ளார் என டெல்லி பல்கலை கழக ஆராய்ச்சியாளர்கள் அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். 

டெல்லியில் ஆல் இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸ் கல்வி அமைப்பை சேர்ந்த ஆறு பேர் கொண்ட ஆராய்ச்சியாளர்கள் குழுவானது, மருத்துவ தடயவியல் துறைக்கு ஓர் அறிக்கையை சமர்ப்பித்தனர்.

மூளையில் ரத்த கசிவு :

அந்த அறிக்கையில் ஓர் அதிர்ச்சி ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. அதில், சமீபத்தில் 41 வயது ஆண் ஒருவரின் இறப்பு குறித்த அறிக்கை குறிப்பிடப்பட்டு இருந்தது. அந்த நபர், மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டு உயிரிழந்ததாக மருத்துவ அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வயகரா :

இறக்கும் போது அவர் மது அருந்தி இருந்துள்ளார். மேலும், அவர் தங்கி இருந்த ஹோட்டல் அறையினை சோதனை செய்த போது, அவர் இறப்பதற்கு முந்தைய நாள் ஒரு பெண்ணுடன் 41 வயது மதிக்கத்தக்க நபர் ஹோட்டல் சென்றுள்ளார். அங்கு உடலுறவு செய்ய எடுத்துக்கொள்ளும் வயகரா மாத்திரை எடுத்துக்கொண்டுள்ளார். அப்போது, அவர் மதுபானமும் அருந்தியுள்ளார்.

மூளை – இதயம் – சிறுநீரகம் :

இதனால் அடுத்த நாள் அவருக்கு உடல்நிலை மோசமாகியுள்ளார். பின்னர் அவர் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். அவரை பிரேத பரிசோதனை செய்த போது அவரது மூளையில் 300 கிராம் அளவுக்கு ரத்த கசிவு இருந்ததாகவும், இதய நாளங்கள் தடிமனாக இருந்ததாகவும். கல்லீரல், சிறுநீரகத்தில் பாதிப்பு இருந்ததாகவும் பிரேத பரிசோதனை அறிக்கையில் தெரியவந்துள்ளது.

Leave a Comment