இந்தியா

கேரளாவில் மூளை உண்ணும் கொடிய நோய் ..! 2 சிறுமி பலி..1 சிறுவனுக்கு தீவிர சிகிச்சை!

கோழிக்கோடு : கேரளாவில் உள்ள கோழிக்கோடு பகுதியில் தற்போது அமீபிக் மூளைக்காய்ச்சல் எனப்படும் மூளை உண்ணும் கோடி நோய் பாதிக்கப்பட்டு 12-வயது சிறுவன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

மேலும், இந்த மே -5 தேதி போல கேரளாவில் உள்ள மலப்புறத்தில் இதே மூளைக்காய்ச்சல் நோய்க்கு 5 வயது சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். அதன் பிறகு 2-வதாக மே-21 ம் தேதி கண்ணுரை சேர்ந்த 13-வயது சிறுமி உயிரிழந்துள்ளார்.

தற்போது, 3-வதாக கோழிக்கோடை சேர்ந்த 12-வயது  சிறுவன் இந்த நோயினால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நோயினை குறித்து அந்த சிறுவனை சிகிச்சை புரியும் மருத்துவர்கள் கூறுகையில், “எங்கள் ஆய்வகங்களில் செய்யப்பட்ட சோதனைகளில் நாங்கள் இந்த தொற்று நோயைக் கண்டறிந்தோம்.

தேங்கி நிற்கும் தண்ணீரில் குளிப்பதையும், தண்ணீரில் மூழ்குவதையும் முடிந்தவரை தவிர்க்க வேண்டும். தீம் பார்க் மற்றும் நீச்சல் குளங்களில் உள்ள தண்ணீரை சுத்தமாக இருக்குமாறு குளோரினேட் செய்ய வேண்டும். சுத்திகரிக்கபடாத தண்ணீரால் தான் இந்த நோய் பரவுகிறது.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களில் பத்து பேரில் ஒருவர் மட்டுமே உயிருடன் பிழைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. அதனால், மிக கவனமாக நாம் இருந்து கொள்ள வேண்டும். தலை வலி, வாந்தி, கண்ணை திடீரென தொறக்க முடியாமல் போவது என இதனது அறிகுறிகள் சற்று தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுகுவது சிறந்ததாகும்.

கோழிக்கோடு சேர்ந்த அந்த சிறுவனும் தற்போது தீவிர சிகிச்சையில் இருந்து வருகிறான். மேலும், நாங்களும் முழு முனைப்போடு சிறுவனுக்கு சிகிச்சை அளித்து வருகிறோம்” என அந்த மருத்துவர் கூறி இருந்தார். இந்த சம்பவம் கேரளாவில் சற்று பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Recent Posts

பிளாப் ஆன சுந்தர் சி படம்…தேம்பி தேம்பி அழுத குஷ்பு மகள்!

சுந்தர் சி : அரண்மனை 4 எனும் மெகா ஹிட் படத்தை கொடுத்துள்ள சுத்தர் சி இந்த படத்திற்கு முன்னதாக காபி வித் காதல் என்ற திரைப்படத்தை இயக்கி…

3 mins ago

பிரிட்டன் தேர்தலில் வெற்றி வாகை சூடிய இந்திய வம்சாவளியினர்…

UK தேர்தல்:  பிரிட்டன் தேர்தலில் இதுவரை வெளியான முடிவுகளின் படி 7 இந்திய வம்சாவளியினர் வெற்றி பெற்றுள்ளனர். 650 இடங்களை கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு பொதுத்தேர்தல் நேற்று…

1 hour ago

சிறகடிக்க ஆசை சீரியல் ..ஸ்ருதியின் அம்மாவால் தெரியவரும் உண்மைகள்..!

சிறகடிக்க ஆசை இன்று -விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைக்கான [ஜூலை 5] கதைக்களத்தை இங்கே காணலாம். ரவியும் ஸ்ருதியும் கேக்கோட வீட்டுக்குள்ள…

1 hour ago

முந்துங்கள் வருங்கால வங்கி ஊழியர்களே …! UCO வங்கியில் அப்ரண்டிஸ் வேலை ..!

UCO வங்கி : யுனைடெட் கமர்ஷியல் வங்கி லிமிடெட் (UCO) வங்கியில் அப்ரண்டிஸ் காலியிடங்களை ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் 544…

2 hours ago

நல்லா நோட் பண்ணிக்கோங்க மக்களே! நாளை இந்த இடங்களில் மின்தடை!

மின்தடை  : நாளை ( ஜூலை 6 /7/2024) எந்தெந்த மாவட்டங்களில் எந்தெந்த இடங்களில் மின்தடை ஏற்படும் என்பதற்கான விவரத்தை பார்க்கலாம். தென் சென்னை - ஐய்யப்பன்தாங்கல் காட்டுப்பாக்கம்,…

2 hours ago

எடப்பாடி பழனிச்சாமி ஓர் நம்பிக்கை துரோகி.? அண்ணாமலை கடும் தாக்கு.!

விழுப்புரம்: நம்பிக்கை துரோகி என்ற வார்த்தை எடப்பாடி பழனிசாமிக்கு பொருத்தமாக இருக்கும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார்.. இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி…

2 hours ago