ஈரோட்டில் 16 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும் – தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனையடுத்து, அனைத்து கட்சியினரும் தேர்தல் பணிகளில் முனைப்புடன் ஈடுபட்டு வருகின்றனர்.

71 வழக்குகள் பதிவு 

இதற்காக கட்சி தலைவர்கள் தங்கள் இறுதிக்கட்ட பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். இந்த நிலையில், தேர்தல் அதிகாரி கிருஷ்ணன் உன்னி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் தொடர்பாக இதுவரை 71 வழக்குகள் பதிவாகியுள்ளன. இன்று வரை 734 புகார்கள் வந்துள்ள நிலையில், 71 வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

16 மேஜைகளில் வாக்கு எண்ணிக்கை 

மேலும், ஈரோடு கிழக்கில் பதிவாகும் வாக்குகளை எண்ணும் பணி 16 மேஜைகளில் நடைபெறும். 16 மேஜைகளில் 10 மேஜைகள் ஒரு அறையிலும், 6 மேஜைகள் ஒரு அறையிலும் வைத்து எண்ணிக்கை நடைபெறும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment